செய்திகள் :

செருப்பால் அடித்த டெக்னீஷியன்; வெளுத்து வாங்கிய தூய்மை பணியாளர்கள்! - மருத்துவமனையில் நடந்தது என்ன?

post image

அருப்புக்கோட்டையில் துப்புரவு பணியாளரை மருத்துவமனை‌ ஊழியர் செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீசியனாக பணிபுரிந்து வருபவர் ராஜ். எக்ஸ்ரே அறையை சுழற்சி முறையில் தினமும் ஒரு தூய்மை பணியாளர் சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி இன்று, எக்ஸ்ரே அறையை உமா மகேஸ்வரி எனும் துப்புரவு பணியாளர் சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

உமா மகேஸ்வரி

அப்போது லேப் டெக்னீசியன் ராஜுக்கும், துப்புரவு பணியாளர் உமா மகேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜ், தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி, உமா மகேஸ்வரியை கையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்க முடியாமல் உமா மகேஸ்வரி அழுதுள்ளார்.

இந்த சத்தம்கேட்டு வந்த சக துப்புரவு பணியாளர்கள் லேப் டெக்னீசியன் ராஜுக்கு எதிராக மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த மருத்துவ அலுவலர்கள், ராஜை அழைத்து விசாரணை நடத்தியதோடு அவரின் நடத்தையை கண்டித்தனர். மேலும், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து ராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் மருத்துவ அலுவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ராஜ்

இந்தநிலையில், திடீர் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதில் துப்புரவு பணியாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து லேப் டெக்னீசியன் ராஜை சரமாரியாக தாக்கினர்.

இதையடுத்து, இருதரப்பினரையும் சமாதானப்படுத்திய மருத்துவ அலுவலர்கள், ராஜை மீட்டு முதலுதவிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என கூறினர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Ooty: அனுமதியோ 40 மரங்களுக்கு, வெட்டிக் கடத்தப்பட்டதோ 250 மரங்கள்! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பேரூராட்சி உட்பட்ட மணிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது கழிவு மேலாண்மை கூடம். நீலகிரி தைல மரங்கள் எனப்படும் யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் நாள்தோ... மேலும் பார்க்க

மழை ஈரப்பதம்: கட்டுமான பணியின்போது மண்சுவர் விழுந்து தொழிலாளி பலி! - கரூர் சோகம்

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பஞ்சமாதேவியைச் சேர்ந்த காளியப்பன் மகன் பொன்னுசாமி என்பவரது புதிய வீடு கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் கரூர் உப்பிடமங்கலம் அருக... மேலும் பார்க்க

நெல்லை: பென்சில் தகராறில் 8-ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; சக மாணவர் வெறிச்செயல்!

நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதனை ஒழிக்க மாணவர்கள் மத்தியில் கல்வித்துறையினர் , காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட... மேலும் பார்க்க

பைக்கில் வேகமெடுத்த சிறுவன்; முதியவர் மீது மோதி காயம்.. அம்மா மீது வழக்கு - என்ன நடந்தது?

சென்னை சாலிகிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சம்பத் (76). கடந்த 11-ம் தேதி இரவு சம்பத், மார்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலிகிராமம் அம்பேத்கர் தெருவில் நடந்து சென்ற... மேலும் பார்க்க

``மும்பை தாக்குதலுக்கு இப்படித்தான் நாள் குறித்தோம்..'' - விசாரணையில் தஹாவூர் ராணா பகீர்

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி தஹாவூர் ராணா மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகா... மேலும் பார்க்க

தூத்துக்குடி : வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாய் - தங்கநகைக்காக கொலை செய்த பெண்

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் திருப்பனை சி.எஸ்.ஐ கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். அவரின் மனைவி வசந்தா. அங்கன்வாடி ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு சபிதா என்ற மகளும், வினோத், ... மேலும் பார்க்க