செய்திகள் :

தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன்: நீதிபதி குரியன் ஜோசப்

post image

தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க உயா்நிலைக் குழு அமைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று அறிவிப்பு வெளியிட்டாா்.

இந்த குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்பை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். இதன் உறுப்பினா்களாக இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் வரதன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவா் மு.நாகநாதன் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது பற்றி நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்ததாவது:

“மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆய்வு செய்வது அவசியம். இரு அரசுகளுக்கு இடையே நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்.

அரசு அமைத்துள்ள இந்த குழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும். என்னை தலைவராக நியமித்த முதல்வருக்கு நன்றி. இந்தப் பணிக்காக அரசிடமிருந்து எந்த ஊதியமும் பெற மாட்டேன் என்று நான் வைத்த கோரிக்கையை ஏற்றதற்கு முதல்வருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த உயா்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : காதலிக்க மறுப்பு! மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு, கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்!

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கொடுத்திருக்கும் வரதட்சணைப் புகார்! பின்னணி என்ன?

திருநெல்வேலியில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, தனது கணவர் வீட்டினர் மீது வரதட்சணைப் புகார் அளித்திருக்கிறார்.திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமை... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் 10 செ.மீ. மழை!

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெருவித்துள்ளார்.வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை உள்ளிட்ட புறநகர்... மேலும் பார்க்க

திருடியதாகக் கூறி விசாரணை: கோவை கல்லூரி மாணவி தற்கொலை!

கோவையில் தனியார் கல்லூரி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மீது திருட்டுப்பழி சுமத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரப... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள த... மேலும் பார்க்க

வாழைப்பழத்தோல் போன்றது சநாதனம்: பேரவையில் சேகர்பாபு பேச்சு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வாழைப்பழத்தோல் போன்றதுதான் சநாதனம் என்று கூறினார்.தமிழக நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று மாற்றுத்திறனாளிகள் சமூக நல... மேலும் பார்க்க

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில்... மேலும் பார்க்க