செய்திகள் :

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர். கவாய்!

post image

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாயை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளார்.

முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவியை ஏற்கும் இரண்டாவது தலித் நீதிபதி கவாய் ஆவார்.

அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்க தற்போதைய தலைமை நீதிபதியிடன் மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.

அதனடிப்படையில், பி.ஆர். கவாய் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு உறுதி செய்யப்படும்.

உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் வருகின்ற மே 13 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

இதையடுத்து, 52-ஆவது தலைமை நீதிபதியாக மே 14 ஆம் தேதி பி.ஆர். கவாய்-க்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவியேற்கவுள்ளார்.

இவர், நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகத் தொடர்வார்.

பி.ஆர். கவாய் பின்னணி

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்தவர் பி. ஆர். கவாய். 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்த கவாய், மும்பை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் 2005 ஆம் ஆண்டும் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார். 2019 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதியானார்.

உச்சநீதிமன்றம் வழங்கிய பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளின் பகுதியாக கவாய் இருந்துள்ளார். பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு வழங்கிய அமர்வில் இவரும் ஒருவர்.

இதையும் படிக்க : டிரெண்ட் ஆகும் டோலோ 650 மாத்திரை! என்ன ஆனது?

பெற்றோா் விவாக ரத்து: குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றம்: உச்சநீதிமன்றம் கண்டனம்

‘கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல்’ என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. விவாகரத்து ஆன இந்திய மனைவியிடமிருந்து கு... மேலும் பார்க்க

இபிஎஃப்ஓ சேவைகளை மேம்படுத்த புதிய ஐடி மென்பொருள்: மே-ஜூனில் அறிமுகம்: மத்திய அமைச்சா் மாண்டவியா

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சேவைகளை மேம்படுத்த மே அல்லது ஜூன் மாதத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப (ஐடி) மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்... மேலும் பார்க்க

சென்னையில் குழாய் வழி எரிவாயு திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. தமிழ்நாடு கடலோர கண்காணிப்பு ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படை... மேலும் பார்க்க

பிகாா்: இறந்ததாக கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிா்ச்சி

பிகாா் மாநிலம் தா்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கடந்த பிப்.26-ஆம் தேதி ரயிலில் அடிபட்டு அந்... மேலும் பார்க்க

ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய துணை முதல்வர்! மக்கள் நெகிழ்ச்சி

ஆந்திரத்தில் கிராமம் ஒன்றில் பெண்கள் வெறுங்கால்களுடன் நடப்பதைக் கண்ட துணை முதல்வர் பவன் கல்யாண் அனைவருக்கும் காலணிகளை அனுப்பி வைத்தார். ஆந்திர மாநிலம், அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரக்கு மற... மேலும் பார்க்க

தாணே: துறவி போல் வேடமிட்டு தங்கச் சங்கிலியை திருடிய கும்பல்

தாணேவில் துறவி போல் வேடமிட்டு முதியவரிடம் தங்கச் சங்கிலியை திருடிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், டோம்பிவலியில் 75 வயது முதியவரிடம் இருந்து ரூ.1.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள... மேலும் பார்க்க