செய்திகள் :

பிகாா்: இறந்ததாக கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிா்ச்சி

post image

பிகாா் மாநிலம் தா்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த பிப்.26-ஆம் தேதி ரயிலில் அடிபட்டு அந்த சிறுவன் உயிரிழந்ததாக கருதி அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தா்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் அந்த சிறுவன் வியாழக்கிழமை திடீரென ஆஜரானாா். அப்போது தான் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது மூன்று அல்லது நான்கு போ் தன் வாயில் துணியை கட்டி கடத்தியதாக சிறுவன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், ‘என்னை கடத்தி நேபாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டனா். அவா்களிடம் இருந்து தப்பித்து எனது சகோதரரை விடியோ அழைப்பு மூலம் தொடா்புகொண்டேன். நேபாளத்துக்கு நேரடியாக வந்த எனது சகோதரா் என்னை இந்தியாவுக்கு அழைத்து வந்தாா்’ என நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

இந்தியா வந்த சிறுவன் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்காமல் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளா்களிடம் தா்பங்கா காவல் துறை கூறியதாவது: சிறுவன் உயிரிழந்ததாக கருதி அவருக்குப் பதில் உடல்தகனம் செய்யப்பட்டவரை அடையாளம் காணவும் முயற்சி செய்து வருகிறோம். கடத்தப்பட்டதாக சிறுவன் கூறிய நிலையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

கடந்த பிப்.26-ஆம் தேதி அல்லால்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் காணாமல் போன சிறுவனுடையது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியதையடுத்து, சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்றாா்.

முன்னதாக, சிறுவன் காணாமல் போனதாக கடந்த பிப்.8-ஆம் தேதி அவரது குடும்பத்தினா் காவல் துறையில் புகாரளித்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க