செய்திகள் :

தூத்துக்குடி : வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாய் - தங்கநகைக்காக கொலை செய்த பெண்

post image

தூத்துக்குடி மாவட்டம்,  மெஞ்ஞானபுரம் திருப்பனை சி.எஸ்.ஐ கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். அவரின் மனைவி வசந்தா. அங்கன்வாடி ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு சபிதா என்ற மகளும், வினோத், விக்ராந்த்  ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

சபிதா, வினோத் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். விக்ராந்த்,  சாத்தான்குளம் டிஎ.ஸ்.பி அலுவலகத்தில் காவலராக  பணிபுரிந்து வருகிறார். இவர் ஆனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கமாக காலை, மாலை வேளைகளில் அக்கம்பக்கத்தினருடன் வசந்தா அமர்ந்து பேசுவது வழக்கம்.

வசந்தா

ஆனால், நேற்று (14-ம் தேதி) மாலை அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். வீட்டின் ஜன்னல்களும் கதவுகளும் பூட்டப்பட்டு கிடந்தது.  இதனையடுத்து விக்ராந்திற்கு தகவல் கூறியுள்ளனர். தனது தாயாரின் செல்போனை தொடர்பு கொண்டபோது செல்போன் அழைப்பினை அவர் எடுக்கவில்லை.  இந்த நிலையில், தனது உறவுக்காரர் ஒருவரை வீட்டிற்கு அனுப்பி பார்க்கச் சொன்னபோது தலையணையால் அமுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

அவரது கழுத்தில் அணிந்திருந்த  செயின், கம்மல்கள் என 9 சவரன் தங்க நகைகள் பறித்துச் சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம்  தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு நெல்லை டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமனி உத்தரவிட்ட நிலையில் தீவிரமாக போலீஸார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் பேய்குளம் அருகே உள்ள மீரான் குளத்தைச் சேர்ந்த செல்வ ரதி  என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்வரதிக்கு சொந்த ஊர் தேரிப்பனை. அங்கிருந்து ஈசாக் என்பவருடன் திருமணம் ஆகி மீரான் குளத்தில் வசித்து வருகிறார். இவருக்கு திருட்டு பழக்கம் இருந்துள்ளது. அவர் வீட்டு அருகிலேயே ஒரு சில சம்பவங்களை நடத்தியுள்ளார்.

மெஞ்ஞானபுரம் காவல் நிலையம்

ஆனாலும் புகார் செய்யப்படவில்லை. இந்நிலையில் தேரிப்பனையில் உள்ள விக்ராந்தின் தாய் வசந்தா வீட்டிற்கு செல்வரதி சென்றுள்ளார். வசந்தாவிடம் பேச்சுக்கொடுத்த அவர், வசந்தாவின் முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.  9 சவரன் தங்க நகைகளை திருடிக் கொண்டு நேராக மீரான் குளம் வந்துள்ளார். அங்கு அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்பு ஓய்வு பெற்ற மூதாட்டியை தள்ளி கொலை செய்தது, அல்வா கடைக்காரர் மகளிடம் நகையைத் திருடியது போன்ற சம்பவங்கள் இப்போது வெளிவந்துள்ளன. அது தொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க

இன்ஸ்டா வீடியோவில் காதல்; துப்பட்டாவால் கொலை செய்யப்பட்ட கணவன் - ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானாவில் உள்ள பிரேம் நகரில் வசிப்பவர் ரவீனா(32). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட ... மேலும் பார்க்க

Ooty: அனுமதியோ 40 மரங்களுக்கு, வெட்டிக் கடத்தப்பட்டதோ 250 மரங்கள்! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பேரூராட்சி உட்பட்ட மணிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது கழிவு மேலாண்மை கூடம். நீலகிரி தைல மரங்கள் எனப்படும் யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் நாள்தோ... மேலும் பார்க்க

மழை ஈரப்பதம்: கட்டுமான பணியின்போது மண்சுவர் விழுந்து தொழிலாளி பலி! - கரூர் சோகம்

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பஞ்சமாதேவியைச் சேர்ந்த காளியப்பன் மகன் பொன்னுசாமி என்பவரது புதிய வீடு கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் கரூர் உப்பிடமங்கலம் அருக... மேலும் பார்க்க

செருப்பால் அடித்த டெக்னீஷியன்; வெளுத்து வாங்கிய தூய்மை பணியாளர்கள்! - மருத்துவமனையில் நடந்தது என்ன?

அருப்புக்கோட்டையில் துப்புரவு பணியாளரை மருத்துவமனை‌ ஊழியர் செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "... மேலும் பார்க்க