செய்திகள் :

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: கொல்கத்தா கேப்டன்

post image

கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) கேப்டன் அஜிங்யா ரஹானே பஞ்சாப் அணியுடனான மோசமான தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாக அடுத்ததாக விளையாடிய கேகேஆர் 15.1 ஓவா்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தது.

மிகவும் குறைவான ரன்களை கட்டுப்படுத்தி பஞ்சாப் சாதனை படைக்க, நடப்பு சாம்பியனான கேகேஆர் மிக மோசமான பேட்டிங்கை செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்த மோசமான தோல்வி குறித்து போட்டிக்கு பிறகான நேர்காணலில் கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பேசியதாவது:

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்

விளக்கம் சொல்வதற்கு எதுவுமில்லை, என்ன நடந்ததென்று அனைவருமே பார்த்தோம். எங்களது முயற்சிகள் குறித்து வருத்தமாக இருக்கிறது. நான் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்.

விக்கெட் மிஸ் ஆனாலும் நான் தவறான ஷாட்டை ஆடி விட்டேன். ரகுவன்ஷி விக்கெட் நடுவரின் தீர்ப்பினால் ஆட்டமிழந்தார். அந்த நேரத்தில் நான் வாய்ப்பை எடுக்க விரும்பவில்லை. அது விவாதத்துக்கு உரியதுதான்.

நெட் ரன் ரேட் குறித்து பிரச்னையில்லை. அணியாக மோசமாக பேட்டிங் விளையாடினோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். தனி மனிதராக நீங்கள் நம்பிக்கையுடனும் நேர்மறையான சிந்தனையுடனும் இருக்க வேண்டும்.

மனதில் பல விஷயங்கள் ஓடின

இந்தப் போட்டியில் பேட்டின் முகப்பு பக்கத்தை முழுமையாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஸ்வீப் ஷாட் கடினமாக இருந்தது. அடிக்க வேண்டிய நோக்கத்துடன் கிரிக்கெட்டிங் ஷாட் ஆடியிருக்கலாம். அந்த நேரத்தில் பல விஷயங்கள் என் மனதுக்குள் ஓடின.

எங்களுக்கு இது எளிமையான சேஸ்தான். நான் மாடிக்குச் சென்றதும் என்னையே அமைதியாக்க வைத்திருந்து வீரர்களிடம் என்ன பேச வேண்டும் என்பதை சிந்திக்கிறேன்.

இப்போதும் நேர்மறையாகவே இருக்க விரும்புகிறேன். தொடரில் இன்னமும் பாதி போட்டிகள் இருக்கின்றன. இதை ஞாபகப்படுத்தி முன்னேற வேண்டும் என்றார்.

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்... மேலும் பார்க்க

தோள்பட்டை பிரச்னையிலும் அபாரமாக பந்துவீசிய சஹால்..! ரிக்கி பாண்டிங் புகழாரம்!

ஆட்ட நாயகன் விருதுபெற்ற சஹாலுக்கு போட்டிக்கு முன்பாக தோள்பட்டை பிரச்னை இருந்ததாக பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 1... மேலும் பார்க்க

வரலாற்று வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் பேசியதென்ன?

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக விளையாடிய கேகேஆர் 15.1 ஓவா்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூ... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதான ஆடுகளம்: எம்.எஸ். தோனி கருத்து

பேட்டா்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவா்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தாா்.சொந்த மண்ணான சேப்பாக்கம் மைதானத்தில் தொடா் த... மேலும் பார்க்க

கொல்கத்தாவை முடக்கிய சஹல், யான்சென்- பஞ்சாப் அசத்தல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பின் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. பஞ்சாப் முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்... மேலும் பார்க்க