செய்திகள் :

வரலாற்று வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் பேசியதென்ன?

post image

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக விளையாடிய கேகேஆர் 15.1 ஓவா்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் குறைவான ரன்கள் அடித்தும் அதைக் கட்டுப்படுத்தி வென்ற முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் யுஸ்வேந்திர சஹால், மாா்கோ யான்சென் கொல்கத்தா பேட்டிங் வரிசையை நொறுக்கினார்கள்.

இந்த நம்பமுடியாத வரலாற்று வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வெற்றி

இந்த வெற்றியை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது கடினம். எனது உள்ளுணர்வை நம்பினேன். பந்து லேசாக திரும்பியதும் சஹாலை அழைத்தேன். முடிந்த அளவுக்கு அவரது சுவாசத்தைக் கட்டுப்படுத்தினேன்.

சரியான இடத்தில் சரியான வீரர்களை வைத்து எதிர்க்க வேண்டுமென நினைத்தேன். இதைப் பற்றி பேசுவது கடினமானது. இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நான் இரண்டு பந்துகளில் ஆட்டமிழந்தேன். ஒன்று கீழாக வந்தது. மற்றொன்று பேட்டின் அடியில் பட்டது. ஸ்வீப் ஷாட் அடிக்க வீரர்களுக்கு கடினமாக இருந்தது. பிட்ச்சில் சீரற்ற பௌன்சர்கள் இருந்தன.

16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதைப் பார்த்தால் நாங்கள் போதிய அளவுக்கு ரன்களை அடித்திருக்கிறோம் போலிருக்கிறது.

சஹால் பந்துவீசும்போது பிறந்த நம்பிக்கை

பௌன்சர்கள் சீரற்று இருப்பதால் அதை பந்துவீச்சாளர்களிடம் நினைவில் வைக்கும்படி கூறினேன். அவர்களும் அதைச் செய்தார்கள். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எங்களுக்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

சஹால் வீசிய பந்து திரும்பியதும் எங்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்தன.

பேட்டர்களுக்கு நேராக அதிரடியான ஃபீல்டிங்கை அமைத்தேன். அவர்களும் அதற்கேற்ப தவறு செய்ததால் விக்கெட்டுகள் கிடைத்தன. இந்த வெற்றியும் நாங்கள் தன்னடக்கமாக இருக்க விரும்புகிறோம்.

இந்தப் போட்டியில் இருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொள்கிறோம். அதை அடுத்த போட்டியில் முதல் பந்தில் இருந்தே செயல்படுத்துவோம் என்றார்.

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்... மேலும் பார்க்க

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: கொல்கத்தா கேப்டன்

கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) கேப்டன் அஜிங்யா ரஹானே பஞ்சாப் அணியுடனான மோசமான தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்... மேலும் பார்க்க

தோள்பட்டை பிரச்னையிலும் அபாரமாக பந்துவீசிய சஹால்..! ரிக்கி பாண்டிங் புகழாரம்!

ஆட்ட நாயகன் விருதுபெற்ற சஹாலுக்கு போட்டிக்கு முன்பாக தோள்பட்டை பிரச்னை இருந்ததாக பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 1... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதான ஆடுகளம்: எம்.எஸ். தோனி கருத்து

பேட்டா்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவா்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தாா்.சொந்த மண்ணான சேப்பாக்கம் மைதானத்தில் தொடா் த... மேலும் பார்க்க

கொல்கத்தாவை முடக்கிய சஹல், யான்சென்- பஞ்சாப் அசத்தல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பின் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. பஞ்சாப் முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்... மேலும் பார்க்க