செய்திகள் :

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

post image

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்டுமென பிசிசிஐ-இடமும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ரசிகர்களின் ஆதரவினால்தான் கம்பீர் பயிற்சியாளர் ஆனதும் கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணிக்காக ஷ்ரேயாஸ் ஐயர் வென்று கொடுத்தும் கவனிக்கத்தக்கது.

சையத் முஷ்டக் அலி தொடரில் ஷ்ரேயாஸ் தலைமையில் கோப்பை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பிசிசிஐ ஒப்பந்தம் இல்லாமல் இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதையும் ஷ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் வென்றார்.

தில்லி, கேகேஆர் அணியை வழிநடத்தி இறுதிப் போட்டிக்கு கொண்டுவந்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் அணியையும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லுவார் என எதிர்பார்க்கப்படடுகிறது.

முலான்புரில் நேற்று (ஏப்.15) நடைபெற்ற போட்டியில் 111 ரன்களை கட்டுப்படுத்தி வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். இது சாதாரண விஷயமல்ல என்றும் அவரது கேப்டன்சி (தலைமைப் பண்பு)தான் காரணம் என்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஷ்ரேயாஸின் தலைமைப் பண்பினைப் பாராட்டி வருகிறார்கள்.

முந்தைய போட்டியில் தோல்வியுறும்போது, “பந்துவீச்சாளர்களை சரியாக மாற்றி கொடுத்திருக்கலாம்” என தனது தவறை ஒப்புக்கொண்டதும் பலரால் பாராட்டப்பட்டு வருகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை ஷ்ரேயாஸ் தலைமையில் வென்றால் இந்திய அணிக்கும் அவர் கேப்டனாகுவார் என்பதில் அவரது ரசிகர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

சிஎஸ்கேவில் மற்றொரு இளம் வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றொரு இளம் வீரர் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து நடந்த 5 ஆட்டங்களிலும் ... மேலும் பார்க்க

பஞ்சாபுடன் பலப்பரீட்சை: பெங்களூரில் ஆர்சிபி வெல்லுமா?

சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்வியுறும் ஆர்சிபிக்கு இன்று (ஏப்.18) பெங்களூரில் கடும் சவால் காத்திருக்கிறது.நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதார் தேர்வானார். இவரது தலைமையில் மு... மேலும் பார்க்க

விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

வான்கடே திடலில் நேற்றிரவு (ஏப்.17) நடைபெற்ற போட்டியில் இதற்கெல்லாம் நோ பால் தருவார்களா என ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சியைந்த சம்பவம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 16... மேலும் பார்க்க

சிஎஸ்கேவில் இணையும் குட்டி ஏபிடி வில்லியர்ஸ்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு சிஎஸ்கே ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ’குட்டி ஏபிடி’ என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் ... மேலும் பார்க்க

அதிக டாட் பந்துகள்: எதிரணிகளைத் திணறடிக்கும் கலீல் அகமது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்த சீசனில் அதிக டாட் பந்துகளை வீசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.நடப்பாண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7... மேலும் பார்க்க

க்ளென் பிலிப்ஸுக்கு மாற்றாக இலங்கை வீரர்!

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸ் காயத்தினால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக இலங்கை வீரர் தசுன் ஷானகா தேர்வாகியுள்ளார்.சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ் த... மேலும் பார்க்க