செய்திகள் :

விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

post image

வான்கடே திடலில் நேற்றிரவு (ஏப்.17) நடைபெற்ற போட்டியில் இதற்கெல்லாம் நோ பால் தருவார்களா என ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சியைந்த சம்பவம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது 6.4ஆவது ஓவரினை ஜீசன் அன்சாரி வீசும்போது மும்பை பேட்டர் ரியால் ரிக்கல்டன் அடித்த பந்தினை பாட் கம்மின்ஸ் கேட்ச் பிடிப்பார்.

ஆட்டத்தில் முக்கியமான விக்கெட்டாகப் பார்க்கப்பட்ட நேரத்தில் நடுவர் நோ பால் என அறிவிப்பார். பந்துவீச்சாளர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக இந்தமுறை கீப்பர் செய்த தவறுக்கு நோ பால் தரப்பட்டுள்ளது.

பந்து வீசும்போது விக்கெட் கீப்பர் பந்தினை ஸ்டம்புக்கு முன்பாக பிடிக்கக் கூடாது. இது பொதுவாக ஸ்டம்பிங் செய்யும்போது சோதிப்பார்கள். ஆனால், ஆட்டத்தில் பந்துவீசும்போது ஸ்டம்பிங் இல்லாவிட்டாலும் இதைப் பரிசோதிப்பார்களென ஐபிஎல் ரசிகர்களுக்கு நேற்றுதான் தெரிய வந்துள்ளது.

எம்சிசியின் 27.3ஆவது விதியின்படி பந்து பேட்டில் படும்வரை அல்லது ஸ்டம்பினை தாண்டும்வரை கீப்பரின் கையுறை ஸ்டம்பிற்கு பின்புறம் மட்டுமே இருக்க வேண்டும்.

சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் கிளாசன் செய்த தவறினால் விக்கெட் இழப்பு மட்டுமில்லாமல் நோ பாலும் கொடுக்கப்பட்டது.

பின்னர், இறுதியில் மும்பை அணி 18.1 ஓவர்களில் 166/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆர்சிபியில் இல்லாவிட்டாலும் சின்னசாமி திடலில் தொடரும் சஹாலின் ஆதிக்கம்!

ஆர்சிபி அணிக்கு பெங்களூரிலுள்ள சின்னசாமி திடல்தான் ஹோம் கிரௌண்டாக (சொந்தத் திடல்) இருக்கிறது. இந்தத் திடலில் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். ஆர்சிபி அணியில் 2014- 2021வரை ... மேலும் பார்க்க

தோல்விலும் ஆட்ட நாயகனான ஆர்சிபி வீரர்: டிம் டேவிட் புதிய சாதனை!

பெங்களூரில் நேற்றிரவு மழையின் காரணமாக 14 ஓவர்கள் போட்டியாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 95/9 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த... மேலும் பார்க்க

சிஎஸ்கேவில் மற்றொரு இளம் வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றொரு இளம் வீரர் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து நடந்த 5 ஆட்டங்களிலும் ... மேலும் பார்க்க

பஞ்சாபுடன் பலப்பரீட்சை: பெங்களூரில் ஆர்சிபி வெல்லுமா?

சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்வியுறும் ஆர்சிபிக்கு இன்று (ஏப்.18) பெங்களூரில் கடும் சவால் காத்திருக்கிறது.நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதார் தேர்வானார். இவரது தலைமையில் மு... மேலும் பார்க்க

சிஎஸ்கேவில் இணையும் குட்டி ஏபிடி வில்லியர்ஸ்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு சிஎஸ்கே ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ’குட்டி ஏபிடி’ என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் ... மேலும் பார்க்க

அதிக டாட் பந்துகள்: எதிரணிகளைத் திணறடிக்கும் கலீல் அகமது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்த சீசனில் அதிக டாட் பந்துகளை வீசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.நடப்பாண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7... மேலும் பார்க்க