செய்திகள் :

காதலிக்க மறுப்பு! மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு, கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்!

post image

சேலம்: சேலத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார்.

சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி சூர்யா (வயது 21). இவருக்கும் ஐடிஐ முடித்துவிட்டு வேலை தேடிவரும் வீரபாண்டியைச் சேர்ந்த மோகன பிரியன் (வயது 19) என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, சூர்யாவை காதலிப்பதாக மோகன பிரியன் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, இருவரும் நேரில் சந்தித்தபோது, மோகன பிரியனை பிடிக்கவில்லை என்று சூர்யா தெரிவித்துவிட்டார்.

இதனால், இருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக சண்டை நடந்து வந்துள்ளது.

இதனிடையே, சில நாள்களில் கல்லூரி படிப்பை முடிக்கும் சூர்யாவுக்கும் அவரது உறவினருக்கும் திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர்.

ஜூலை இரண்டாம் வாரத்தில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இதனை அறிந்த மோகன பிரியன் ஆத்திரமடைந்துள்ளார்.

கல்லூரி செல்வதற்காக இன்று காலை சேலம் பழைய பேருந்து நிலையம் வந்த சூர்யாவுடன் மோகன பிரியன் சண்டை போட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சூர்யாவை மோகன பிரியன் குத்திவிட்டு தப்ப முயற்சித்துள்ளார்.

ஆனால், அருகிலிருந்தவர்கள் மோகன பிரியனை பிடிக்க முயற்சித்ததால், கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், மோகன பிரியன் மற்றும் சூர்யாவின் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க : பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது: இபிஎஸ்

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கொடுத்திருக்கும் வரதட்சணைப் புகார்! பின்னணி என்ன?

திருநெல்வேலியில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, தனது கணவர் வீட்டினர் மீது வரதட்சணைப் புகார் அளித்திருக்கிறார்.திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமை... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் 10 செ.மீ. மழை!

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெருவித்துள்ளார்.வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை உள்ளிட்ட புறநகர்... மேலும் பார்க்க

திருடியதாகக் கூறி விசாரணை: கோவை கல்லூரி மாணவி தற்கொலை!

கோவையில் தனியார் கல்லூரி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மீது திருட்டுப்பழி சுமத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரப... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள த... மேலும் பார்க்க

வாழைப்பழத்தோல் போன்றது சநாதனம்: பேரவையில் சேகர்பாபு பேச்சு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வாழைப்பழத்தோல் போன்றதுதான் சநாதனம் என்று கூறினார்.தமிழக நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று மாற்றுத்திறனாளிகள் சமூக நல... மேலும் பார்க்க

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில்... மேலும் பார்க்க