செய்திகள் :

பைக்கில் வேகமெடுத்த சிறுவன்; முதியவர் மீது மோதி காயம்.. அம்மா மீது வழக்கு - என்ன நடந்தது?

post image

சென்னை சாலிகிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சம்பத் (76). கடந்த 11-ம் தேதி இரவு சம்பத், மார்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலிகிராமம் அம்பேத்கர் தெருவில் நடந்து சென்றபோது வேகமாக வந்த பைக் ஒன்று முதியவர் சம்பத் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது 16 வயது சிறுவன் பைக்கை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.

சிசிடிவி கேமரா

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய சிறுவன், பைக்கின் உரிமையாளரான சிறுவன் அம்மா ரேவதி ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், ரேவதியை பிடித்து விசாரணை நடத்தி அவரை கைது செய்த போலீஸார், காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். அதே நேரத்தில் சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கூறுகையில், ``சிறுவர், சிறுமிகள் பைக் ஓட்டி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் பைக்கின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில்தான் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் ஒட்டிய பைக் அவரின் அம்மாவின் பெயரில் உள்ளது. அதனால்தான் இந்த வழக்கில் சிறுவனின் அம்மா ரேவதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`பணம் திருடியதாக சந்தேகம்’ வேதனையில் 4வது மாடியில் இருந்து விபரீத முடிவெடுத்த கோவை மாணவி

கோவை நவ இந்தியா பகுதியில் இந்துஸ்தான் மருத்துவமனை இயங்கி வருகிறது. அவர்களுக்கு சொந்தமாக பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியும் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு திருவண்... மேலும் பார்க்க

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க

இன்ஸ்டா வீடியோவில் காதல்; துப்பட்டாவால் கொலை செய்யப்பட்ட கணவன் - ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானாவில் உள்ள பிரேம் நகரில் வசிப்பவர் ரவீனா(32). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட ... மேலும் பார்க்க

Ooty: அனுமதியோ 40 மரங்களுக்கு, வெட்டிக் கடத்தப்பட்டதோ 250 மரங்கள்! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பேரூராட்சி உட்பட்ட மணிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது கழிவு மேலாண்மை கூடம். நீலகிரி தைல மரங்கள் எனப்படும் யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் நாள்தோ... மேலும் பார்க்க

மழை ஈரப்பதம்: கட்டுமான பணியின்போது மண்சுவர் விழுந்து தொழிலாளி பலி! - கரூர் சோகம்

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பஞ்சமாதேவியைச் சேர்ந்த காளியப்பன் மகன் பொன்னுசாமி என்பவரது புதிய வீடு கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் கரூர் உப்பிடமங்கலம் அருக... மேலும் பார்க்க