செய்திகள் :

சத்தீஸ்கரின் மாவோயிஸ்டுகள் 2 பேர் ஜார்க்கண்டில் சரண்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் 2 பேர் ஜார்க்கண்ட் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்ஜேத் பிர்ஜியா மற்றும் மிதிலேஷ் கொர்பா ஆகிய இரண்டு பேரும், லத்தேஹார் பகுதியில் சோட்டு கார்வார் எனும் மாவோயிஸ்டு தலைவரின் கீழ் செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் ஜார்க்கண்டின் லத்தேஹர் மாவட்டத்தின் காவல் துறை உயர் அதிகாரியான குமார் கவுரவ் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரி யாதாராம் பன்கர் ஆகியோரின் முன்னிலையில் இன்று (ஏப்.15) சரண்டைந்துள்ளனர். மேலும், சரண்டைந்த முன்னாள் கிளர்ச்சியாளர்கள் இருவருக்கும் மலர் மாலை அணிவித்து அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்றால் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

முன்னதாக, தற்போது சரண்டைந்துள்ள இருவரின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் எனக் கூறப்பட்டுகிறது.

கடந்த சில நாள்களாக சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சத்தீஸ்கரில் நாய் வாங்க ரூ.200 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற நபர்!

சத்தீஸ்கரில் நாய் வாங்க ரூ.200 கொடுக்க மறுத்த 70 வயது தாயைக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது.சத்தீஸ்கர் மாநிலம், நாகேஷ்வர் நகரில் வசித்து வருபவர் தேவாங்கன் (45). ரிக்‌ஷா ஓட்டுநரான இவருக்கு இரண்டு மகன்க... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பா? - மத்திய அரசு விளக்கம்!

மே 1 முதல் ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, இனி செய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை: பிகாரில் இளைஞர் காங்கிரஸார் ரயில் மறியல் போராட்டம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை எதிர்த்து பிகாரில் இளைஞர் காங்கிரஸார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கின் ... மேலும் பார்க்க

ஜெயின் சமூகத்தைக் குறிவைத்துத் தாக்கும் பாஜக: அகிலேஷ் கண்டனம்!

இந்தியா முழுவதும் ஜெயின் சமூகத்தை பாஜக திட்டமிட்டுக் குறிவைப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். மும்பையில் சமீபத்தில் ஜெயின் கோயில் இடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வந்த செய... மேலும் பார்க்க

இரண்டு குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொன்று தாய் தற்கொலை!

தெலங்கானாவில் இரண்டு குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்த தாய், ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.ஹைதராபாத் புறநகர் கஜுலராமரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் த... மேலும் பார்க்க

மகன் காயம்: தவறுதலாக தந்தைக்கு அறுவைச் சிகிச்சை!

ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த மகனுடன் சென்ற தந்தைக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் விபத்தில் காயமடைந்த மணீஷ் என்பவருக்கு கடந்த சனிக்கிழ... மேலும் பார்க்க