செய்திகள் :

நடத்தையில் சந்தேகம்; மகளைக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த தாய்... உபி-யில் அதிர்ச்சி!

post image

உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தன் உறவினரின் 14 வயது மகளைக் காணவில்லை என அளித்த புகாரின் பேரில், நடத்தப்பட்ட விசாரணை 2025 ஏப்ரல் மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் சிறுமியின் வீட்டாரை போலீஸார் விசாரித்தனர். சிறுமியின் தந்தை வெளியூரில் வேலை செய்து வந்துள்ளார். தாயுடன் மட்டுமே சிறுமி வசித்துவந்தது தெரியவந்தது. இந்நிலையில், அக்கம் பக்கத்தினரை விசாரித்ததில் அச்சிறுமியின் தாயின் மேல் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அவரது வீட்டின் பின்புறத்தில் அச்சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீஸார், சிறுமியின் தாயாரிடம் கடுமையாக விசாரித்துள்ளனர். விசாரணையில் தனது மகளின் குணாதிசயங்கள் பிடிக்காததால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். குற்றத்தை மறைப்பதற்காக சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்ததாகவும் விசாரணையில் கூறினார். பிரேத பரிசோதனையிலும் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.

கொலை
கொலை

நீண்ட கால விசாரணைக்குப் பின்னர், 3 நீதிபதிகள் அடங்கிய தலைமை அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட விசாரணைகள், 7 சாட்சிகளை முன்வைத்த அரசு தரப்பினர் தன் மகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு தாய் தான் இந்த கொலையை செய்துள்ளார் என அரசு தரப்பு வழக்கறிஞர் தன் வாதத்தை முன்வைத்தார்.

வாதங்களை கேட்டறிந்த தலைமை அமர்வு, தாய்தான் சிறுமியைக் கொன்றுள்ளார் என உறுதி செய்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க