செய்திகள் :

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

post image

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். சமூக வலைதளத்தில் நட்பாக பழகி வந்த இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 16-ம் தேதி இரவு 7 மணிக்கு முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒர் இடத்தைக் குறிப்பிட்ட அமீன், அங்கு மாணவனை வரும்படி தெரிவித்திருக்கிறார். அதனால் மாணவனும் அந்த இடத்துக்கு பைக்கில் சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் அமீன் அங்கு வரவில்லை. அதனால் அங்கிருந்து மாணவன் புறப்பட்டிருக்கிறார். அப்போது அங்க வந்த ஒருவர், மாணவனிடம் லிஃப்ட் கேட்டிருக்கிறார். அதனால் மாணவனும் அந்த நபரை பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார்.

கைது

முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரவாசல் தெருவில் நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ அருகே மாணவனை பைக்கை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் அந்த நபர். பைக்கை நிறுத்தியதும் ஆட்டோவிலிருந்த இரண்டு பேர், மாணவனை பைக்கில் ஏறும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். இதையடுத்து மாணவனை ஏற்றிக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள தண்டவாளத்துக்கு அருகில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு சென்ற பிறகு அந்தக் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி மாணவனிடம் ஒரு வாரத்துக்குள் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அதன்பிறகு ஒரு மாதத்தில் 100 கிராம் தங்கம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அப்போது அந்தக் கும்பலிடம் தன்னை விட்டுவிடும்படி மாணவன் கெஞ்சியிருக்கிறார். உடனே அந்தக் கும்பல், `உன் குடும்ப விவரம் எனக்குத் தெரியும், நீ பணம் தங்கம் கொடுக்கவில்லை என்றால் உன் குடும்பத்தையே காலி செய்து விடுவோம்' என்று மிரட்டியிருக்கிறார்கள். இதையடுத்து அங்கிருந்து தப்பிய மாணவன், இரவு ரோந்து பணி போலீஸாரிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார். அதன் பிறகு மாணவன் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சென்னை பாரிமுனையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வசந்த் என்கிற வசந்தபாலன் (33), பிராட்வே பகுதியைச் சேர்ந்த விஜி என்கிற விஜயகுமார் (31) ஆகியோரை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புரை சிலரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்த... மேலும் பார்க்க