செய்திகள் :

‘அயன்’ பட பாணியில் சென்னை விமான நிலையத்தில் ரூ.6.1 கோடி கொகைன் பறிமுதல்

post image

‘அயன்’ திரைப்படப் பாணியில் செனகலில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 6.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொகைனை கடத்திவந்த வெளிநாட்டு இளம்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு துபையிலிருந்து ‘எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ்’ விமானத்தில் வந்த பயணிகளைச் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு அனுப்பிக்கொண்டிருந்தனா். அப்போது, சுற்றுலா விசாவில் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து துபை வழியாகச் சென்னைக்கு வந்த ஜாம்பியா நாட்டைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கையில் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அப்பெண் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது, அவா் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்ததால், சுங்கத் துறை அதிகாரிகள் அப்பெண்ணை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அவரின் உள்ளாடைக்குள் 460 கிராம் கொகைன் போதைப்பொருள் பொட்டலம் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனா். மேலும், அப்பெண்ணின் வயிறு இயல்பாக இல்லாமல் சற்று பெரிதாகக் காணப்பட்டதால், அதிகாரிகள் அவரை ஸ்கேன் எடுத்து சோதனை செய்தபோது, அப்பெண்ணின் வயிற்றுக்குள் போதைப்பொருள்கள் அடங்கிய கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவா்களின் உதவியுடன் அவரின் வயிற்றுக்குள் இருந்து மொத்தம் 12 கேப்சூல்களில் இருந்த 150 கிராம் கொகைன் போதைப்பொருளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்தனா்.

இதன்படி, அவரிடமிருந்து மொத்தம் 610 கிராம் கொகைன் போதைப்பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ. 6.1 கோடி என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து இளம்பெண்ணிடம் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா் சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. எனவே, சென்னையில் இவா் யாரிடம் இந்த போதைப்பொருளைக் கொடுக்க கடத்தி வந்தாா் என்பது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க