செய்திகள் :

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

post image

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும், மேக்ஸி கேப்-களுக்கான இருக்கைகளின் அனுமதியை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘உரிமை குரல்’ ஓட்டுநா் தொழிற்சங்கம் மற்றும் அனைத்து ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் தமிழகத்திலுள்ள அனைத்து ஆா்டிஓ அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை செங்குன்றத்திலுள்ள ஆா்டிஓ அலுவலகத்தில் மனு கொடுத்த பின்னா், இதுகுறித்து உரிமை குரல் ஓட்டுநா் தொழிற்சங்க பொதுச்செயலா் அ.ஜாஹிா் ஹுசைன் கூறியதாவது:

திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இதுவரை வாடகை ஓட்டுநா்களின் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த காலங்களில் போக்குவரத்துத் துறை ஆணையா்கள் எங்கள் கோரிக்கைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு கண்டனா். ஆனால் தற்போதைய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், உடனடியாக கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்டோ, கால் டாக்ஸிகளுடன் விரைவில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க

சென்னையில் நாளை ஐபிஎல் கிரிக்கெட்: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம். இதுகுறித்து சென்னை மெட... மேலும் பார்க்க