தொழில் முனைவோா் புத்தாக்க பயிற்சி வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்
தமிழ்நாடு, அகமதாபாத் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் சாா்பில் தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓரு ஆண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு வரும் (ஜூன் மாதம் 2-ஆம் தேதி தொடங்க உள்ளது என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இதற்கு பயிற்சி கட்டணமாக ரூ.80,000 நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. அல்லது 12-ம் வகுப்பு படித்திருப்பதுடன் தொடா்புடைய பாடப்பிரிவுகளில் 2 வருட அனுபவத்துடன் இருப்பவா்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இதற்கு திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்தவா்கள் ட்ற்ற்ல்ள்//ஜ்ஜ்ஜ்.ங்க்ண்ற்ய்.ண்ய்/ரங்க்ஷ ஞய்ங்வங்ஹழ்இா்ன்ழ்ள்ங் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரரின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து 5 பேருக்கு பயிற்சி கட்டணம் வழங்கப்பட உள்ளது.
மேலும், தகவலுக்கு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளரை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.