மட்றப்பள்ளி சந்தையில் ரூ.45 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தையில் ரூ.45 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக குவிந்தன. அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தா்மபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி சென்றனா். இதில் சிறிய ஆடுகள் ரூ. 4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும், பெரிய ஆடுகள் ரூ.8ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், ரூ.45 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனா்.