செய்திகள் :

`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்களுக்கு ஜாக்பாட்!

post image

அமெரிக்காவில் ஆவணம் செய்யப்படாமல் குடியேறி இருக்கும் மக்களை வெளியேற்றுவது வழக்கம் தான். இது 2009-ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த ஆண்டு வெளியேற்றப்பட்டது தான் உலகம் முழுவதும் கடும் சர்ச்சையை கிளப்பியது.

காரணம், இந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்று இருக்கும் ட்ரம்ப். ஆவணம் செய்யப்படாமல் அமெரிக்காவில் குடியேறி இருக்கும் மக்களை அமெரிக்காவின் ராணுவ விமானத்தில் கைவிலங்கிட்டு அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பினார் ட்ரம்ப்.

இப்படி ஒரு ஆஃபர்! - ட்ரம்ப்பின் அதிரடி
இப்படி ஒரு ஆஃபர்! - ட்ரம்ப்பின் அதிரடி

இது பெரும்பாலான நாடுகள் விரும்பவில்லை. இதற்கு எதிராக குரல் கொடுத்தன.

தற்போது, ஆவணம் செய்யப்படாத மக்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உதவி செய்வதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரம்ப் எப்படி உதவி செய்வார்?

ஆவணம் செய்யப்படாமல் அமெரிக்காவில் இருக்கும் மக்கள் தாங்களாகவே வெளியேற விருப்பப்பட்டால், அவர்களுக்கு அமெரிக்க அரசு பணமும், விமான டிக்கெட்டும் வழங்கும்.

அமெரிக்காவில் இருந்தப்போது, அவர்கள் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடவில்லை என்றால் தான் இந்த உதவி அந்த நபருக்கு கிடைக்கும்.

இதற்காக அமெரிக்க அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டொனால்டு ட்ரம்ப்

இந்த ஆஃபரும் உள்ளது!

இப்படி வெளியேற்றப்படும் மக்கள் எந்த குற்றமும் செய்யாதவராகவும், அவர் அமெரிக்காவிற்கு தேவைப்படுபவராகவும் இருந்தால் அவர் அமெரிக்காவில் தொடர்ந்து இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்.

இந்த வெளியேற்றம் முழுக்க முழுக்க 'குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு தான் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இது ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாகும்.

இதுவரை இந்த விஷயத்தில் கடுமையாக நடந்துவந்த ட்ரம்ப், இப்போது இந்த நிலைபாட்டை எடுத்துள்ளார் என்பது நிச்சயம் ஆச்சரியமான விஷயம்.

`டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது' -எடப்பாடி

சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் இன்று (ஏப்ரல் 16) வெளிநடப்பு செய்திருக்கின்றனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அப்போது அதிமுக- பாஜக கூட்டணியை திமுக விமர... மேலும் பார்க்க

சீனா: `இந்திய நண்பர்களே!' அமெரிக்கா உடன் பகை; இந்தியாவை அணைக்கும் சீனா!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கும், சீனாவிற்கு மறைமுக போர் இருந்துகொண்டே இருந்து வந்தது. 'பரஸ்பர வரி' விதிப்பிற்கு பிறகு இது வெட்ட வெளிச்சம் ஆனது. பரஸ்பர வரிக்கு எதிர்ப்... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென முளைக்கும் ஞானப்பல்; புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதா?

Doctor Vikatan: என்னுடைய தோழியின் அம்மாவுக்கு வாய்ப் புற்றுநோய் வந்து பல வருடங்களாக சிகிச்சையில் இருக்கிறார். மிக இளம் வயதிலேயே அவருக்கு வாய்ப்புற்றுநோய் பாதித்திருக்கிறது. ஞானப்பல் குத்திக்குத்திபுண்... மேலும் பார்க்க

`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது?

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளை மறைக்கவே மாநில சுயாட்சி..'' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

நெல்லை போவதற்கு சென்னையிலிருந்து மதுரை வந்த நயினார் நாகேந்திரன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கருணாநிதி 1969-ல் உருவாக்கிய ராஜமன்னார் குழு பரிந்துரைகள் குறித்து கடிதம் எழுதியதற்கு ... மேலும் பார்க்க