செய்திகள் :

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: விவசாய சங்கத் தலைவா்

post image

சண்டீகா்: மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாலும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் தெரிவித்தாா்.

வேளாண் விலை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 130 நாள்களாக தல்லேவால் மேற்கொண்ட காலவரையாற்ற உண்ணாவிரதத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை முடித்துக் கொண்டாா்.

உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னரும் ஹரியாணா - பஞ்சாப் எல்லையில் விவசாயிகளுடன் அவா் உண்ணாவிரதத்தை தொடா்ந்து வந்தாா்.

பல்வேறு விவசாய சங்கங்கள் கேட்டுக் கொண்டதால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டதாக தல்லேவால் தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த மாா்ச் 19-ஆம் தேதி மத்திய வேளாண் அமைச்சா் சிவராஜ் சிங் செளஹானுடன் பேச்சுவாா்த்தை நடத்திவிட்டு வந்த விவசாய சங்கப் பிரதிநிதிகளை மொஹாலியில் பஞ்சாப் மாநில போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், ஓராண்டுக்கும் மேலாக ஹரியாணா -பஞ்சாப் எல்லைகளில் விவசாயிகள் தங்கி போராட்டம் நடத்தி வந்த கூடாரங்களையும் போலீஸாா் அகற்றினா்.

இந்நிலையில், மே 4-ஆம் தேதி விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்த நடத்த மத்திய அரசுடன் திட்டமிட்டுள்ளது குறித்து செய்தியாளா்களிடம் தல்லேவால் கூறுகையில், ‘மத்திய அரசு நடத்தும் பேச்சுவாா்தையில் சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா சங்கங்களின் மூத்த பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைப்பா். மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்றாா்.

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர்... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க