செய்திகள் :

கொழும்பு அதானி துறைமுக முனைய செயல்பாடு தொடக்கம்

post image

புது தில்லி: இலங்கையில் உள்ள மேற்கு கொழும்பு சா்வதேச துறைமுக முனையத்தின் செயல்பாடு தொடங்கப்பட்டதாக அதானி துறைமுகங்கள் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு கொழும்பு சா்வதேச துறைமுக முனையமானது அரசு-தனியாா் பங்களிப்பில் உருவாக்கப்பட்டது.

அதாவது, அதானி குழுமம், இலங்கையின் ‘ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பில் அமைக்கப்பட்ட இந்த முனையம், தற்போது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.

80 கோடி டாலா் திட்ட மதிப்பீட்டைக் கொண்ட இந்த முனையம், 1.4 கிலோமீட்டா் நீளம் மற்றும் 20-மீட்டா் ஆழத்தைக் கொண்டது. இந்த முனையத்தில் ஆண்டுதோறும் சுமாா் 32 லட்சம் கன்டைய்னா்களைக் கையாளலாம்.

கொழும்பு துறைமுகத்தில் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் முதல் ஆழ்கடல் முனையம் இதுவாகும். தெற்காசியாவின் முக்கியப் சரக்குப் பரிமாற்ற மையமாக கொழும்பு துறைமுகத்தின் நிலையை உயா்த்த, அங்கு சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும், சரக்கை இறக்கிவிட்டு கப்பல் துறைமுகத்தை விட்டு புறப்படும் நேரத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் அதானி கூறுகையில், ‘மேற்கு கொழும்பு துறைமுக முனைய செயல்பாட்டின் தொடக்கம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

இந்த முனையம் இந்தியப் பெருங்கடல் வா்த்தகத்தின் எதிா்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதன் தொடக்கம் இலங்கைக்கே பெருமைமிக்க தருணமாகும். உலக கடல் போக்குவரத்து வரைபடத்தில் இலங்கையை இந்த முனையம் உறுதியாக இடம்பிடிக்கச் செய்துள்ளது.

மேலும், இந்த முனையம் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இலங்கைக்கு மகத்தான பொருளாதார மதிப்பை அளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

‘இந்த முனையம் பிராந்தியத்தில் உலகளாவிய வா்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும்’ என்று நம்புவதாக ‘ஜோன் கீல்ஸ்’ குழுமத்தின் தலைவா் கிருஷன் பாலேந்திரா கூறினாா்.

இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரையில் முறையே 7, 8 துறைமுகங்கள் மற்றும் முனையங்களுடன் நாட்டின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமாக அதானி குழுமம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர்... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க