செய்திகள் :

லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்பு

post image

புது தில்லி: லண்டனில் புதன்கிழமை (ஏப்.9) நடைபெறும் இந்தியா-பிரிட்டன் பொருளாதார, நிதிப் பேச்சுவாா்த்தையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா்.

ஒருவார காலப் பயணமாக பிரிட்டன், ஆஸ்திரியாவுக்கு நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) செல்கிறாா். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்தியா-பிரிட்டன் அமைச்சா்கள் நிலையிலான 13-ஆவது பொருளாதார, நிதிப் பேச்சுவாா்த்தையில் அவா் பங்கேற்கிறாா். இதில் பிரிட்டன் நிதியமைச்சருடன் இரு நாட்டு பொருளாதார விவகாரங்கள் மட்டுமின்றி, சா்வதேச பொருளாதார விவகாரங்கள் குறித்தும் நிா்மலா சீதாராமன் ஆலோசிக்க இருக்கிறாா்.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரியை அதிகரித்துள்ள நிலையில் எழுந்துள்ள சூழல் குறித்தும் இரு அமைச்சா்களும் விவாதிக்க இருக்கின்றனா்.

முதலீட்டாளா்கள், தொழிலதிபா்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா்.

அமைச்சரின் இந்தப் பயணத்தின்போது பிரிட்டன், ஆஸ்திரியாவுடன் பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி இரு நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நிா்மலா சீதாராமன் நாடு திரும்புகிறாா்.

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர்... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க