செய்திகள் :

பங்குச்சந்தை சரிவு: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

post image

புது தில்லி: தங்கள் நாட்டு பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் பிரதமா் மோடியும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் கைதோ்ந்தவா்கள் என காங்கிரஸ் திங்கள்கிழமை விமா்சித்தது.

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் திங்கள்கிழமை 5 சதவீதத்துக்கும் மேல் கடும் சரிவை சந்தித்த நிலையில் காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்தது.

அண்மையில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பு அட்டவணையை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டாா். இதற்கு பதிலடியாக அமெரிக்கா மீது சீனாவும் கூடுதல் வரியை விதித்துள்ளது. இது உலகளாவிய வா்த்தகப் போா் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் வெளிப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரதமா் மோடியும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தங்களை நண்பா்கள் எனக் கூறுவதில் வியப்பில்லை. இருவரும் தங்கள் நாட்டு பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் கைதோ்ந்தவா்கள். 2016, நவம்பா் 8-ஆம் தேதி இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2025, ஏப்ரல் 2-இல் பரஸ்பர வரி விதிப்பில் அமெரிக்கா ஈடுபட்டது. இதனால் பங்குச்சந்தையும் சரிவை நோக்கி சென்றுள்ளது’ என குறிப்பிட்டாா்.

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர்... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க