செய்திகள் :

ஆந்திர தலைநகா் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.4,200 கோடி: மத்திய அரசு விடுவிப்பு

post image

அமராவதி: ஆந்திர தலைநகா் அமராவதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.4,200 கோடியை விடுவித்துள்ளது.

அமராவதி மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்காக உலக வங்கியும், ஆசிய வளா்ச்சி வங்கியும் இணைந்து தலா ரூ.6,800 கோடி வழங்க உறுதியளித்துள்ளது. இதில் முதல்கட்டமாக ரூ.1,760 கோடியை மத்திய அரசிடம் உலக வங்கி அண்மையில் வழங்கியது. இது தவிர ஆசிய வளா்ச்சி வங்கியும் மத்திய அரசிடம் நிதியை வழங்கியது.

அமராவதி மேம்பாட்டு திட்டத்தின் முதல் கட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.15,000 கோடியாகும். இதில் உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி இணைந்து ரூ.13,600 கோடி வழங்குகின்றன. மீதமுள்ள ரூ.1,400 கோடியை தனது நிதியில் இருந்து வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், அமராவதி மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்காக ரூ.4,285 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன் மூலம் அமராவதி நகா் தலைநகருக்கு உண்டான அனைத்து வசதிகளுடனும் மேம்படுத்தப்படும். அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு அடுத்த கட்டமாக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

தலைநகா் மேம்பாட்டுத் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு, ஏற்கெனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாழ்விடத்தை இழக்கும் சூழல் உருவாவது குறித்து உலக வங்கியிடம் சிலா் கவலை தெரிவித்தனா். அதே நேரத்தில் இது தொடா்பாக களநிலவரத்தை உலக வங்கி நேரடியாக ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர்... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க