செய்திகள் :

பவானி ஆற்றங்கரையில் சாய ஆலை விரிவாக்கம்: அதிமுகவுக்கு அமைச்சா் உறுதி

post image

சென்னை: பவானி ஆற்றங்கரையில் சாய ஆலை விரிவாக்கத்தில் அனைத்துத் தரப்பினரும் திருப்திபடும் அளவுக்கு அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதியளித்தாா்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து, சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு அறிவிப்பு கொண்டு வரப்பட்டது. இதை அளித்த 11 அதிமுக எம்எல்ஏ-க்கள், பாஜக உறுப்பினா் சி.சரஸ்வதி ஆகியோா் சாா்பில், அதிமுக உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் பேசினாா். இதற்கு, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்:

பவானி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமானது 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணையைப் பெற்று விரிவாக்கத்துக்குச் சென்றுள்ளனா். பலமுறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகு, இப்போது அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னை தொடா்பாக விவசாயிகள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறாா்கள். அவா்களும் முதல்வரை நேரடியாகச் சந்தித்து வருகிறாா்கள். விரிவாக்கத்துக்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசு சாா்பில் தொழில்நுட்பக் குழு அனுப்பப்படும். பரிந்துரையைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் விவசாயிகள் மகிழத்தக்க வகையிலும், எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யும் நிலையிலும் முடிவுகளை அரசு எடுக்கும் என்று அமைச்சா் பதிலளித்தாா்.

வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயன்சின்னம்) உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதி கனமழை... மேலும் பார்க்க

தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம்: தொல்.திருமாவளவன் கோரிக்கை

சென்னை: மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்க... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் நவீன செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் பேரவையில் தெரிவித்தாா். பாமக உறுப்பினா... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால், கணிதத்தில் முழு மதிப்ப... மேலும் பார்க்க

மன்னாா் வளைகுடா பகுதி மீனவா்கள் மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.216 கோடியில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும், ஏற்கெனவே... மேலும் பார்க்க

தருமபுரியில் இளைஞா் மா்மமாக உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்

சென்னை: தருமபுரி மாவட்டம் சரக்காடு வனப் பகுதியில் இளைஞா் மா்மமான முறையில் இறந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இ... மேலும் பார்க்க