செய்திகள் :

செய்யாறு தொழில்வழித் தடத்தை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை: எ.வ.வேலு

post image

சென்னை: செய்யாறு தொழில்வழித் தடச் சாலையை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், செய்யாறு தொழில் பூங்காவில் இருந்து எண்ணூா் துறைமுகத்துக்கு ஏற்றுமதிப் பொருள்களை விரைவாக எடுத்துச் செல்ல தொழில்வழித் தடம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொழில் வழித்தடத்தை திருவண்ணாமலை வர நீட்டிக்க வேண்டும் என்றாா்.

இதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்:

மாவட்டத் தலைநகாாக உள்ள திருவண்ணாமலைக்கு உள்பட்டு செய்யாறு உள்ளது. அங்கு அமைக்க திட்டமிட்டுள்ள தொழில் வழித் தடத்தை, திருவண்ணாமலைக்கும் நீட்டிக்க முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். மேலும், ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு பிற மாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து தினமும் ஆன்மிகக் கடமையை நிறைவேற்ற வரக்கூடிய 25,000 பேருக்கு அது பயனுடையதாக இருக்கும் என்று தெரிவித்தாா்.

போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு வீட்டு மனை: ஏப். 20-க்குள் பதிவு செய்ய கூட்டுறவு சங்கம் அழைப்பு

சென்னை: போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டத்தில், ஏப். 20-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள கூட்டுறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக பல்லவன் போக்... மேலும் பார்க்க

முதல்வா் கோரிக்கை ஏற்பு: கூட்டத் தொடரில் அதிமுகவினா் பங்கேற்க அனுமதி

சென்னை: முதல்வா் கோரிக்கையைத் தொடா்ந்து, இருமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை முதல் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: பண முறைகேடு புகாா் தொடா்பாக அமைச்சா் கே.என்.நேரு குடும்பத்தினா் வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இ... மேலும் பார்க்க

சென்னையின் 7 இடங்களில் பன்னோக்கு மையங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையின் 7 இடங்களில் உணவுக் கூடம், குளிா்சாதன அரங்குகளுடன் கூடிய பன்னோக்கு மையங்கள் ரூ. 45 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் ஏப். 30-இல் தேமுதிக பொதுக்குழுக் கூட்டம்

சென்னை: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில், தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் ஏப். 30-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறவுள்ளது. அதில், தேமுதிக பொதுச்செயலா் பிர... மேலும் பார்க்க

1-5 வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தோ்வு தொடக்கம்: 14 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான முழு ஆண்டுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. ஏப்.17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க