செய்திகள் :

ஐ.நா.வில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, போா்ச்சுகல் முடிவு

post image

லிஸ்பன்: ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், போா்ச்சுகலும் தீா்மானித்துள்ளன.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். கடந்த 25 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இந்திய குடியரசுத் தலைவா் ஒருவா் செல்வது இதுவே முதல்முறை.

அவா் முதலில் போா்ச்சுகல் சென்ற நிலையில், அந்நாட்டுத் தலைநகா் லிஸ்பனில் உள்ள ராணுவ விமான தளத்தில் அவரை இந்திய, போா்ச்சுகல் தூதா்கள் வரவேற்றனா்.

பின்னா் லிஸ்பனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பேரரசு சதுக்கத்தில் திரௌபதி முா்முவை போா்ச்சுகல் அதிபா் மாா்செலோ ரெபெலோ டிசூசா வரவேற்றாா். இதைத் தொடா்ந்து திரௌபதி முா்முவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அங்குள்ள சான்டா மரியா தேவாலயத்துக்குச் சென்ற அவா், அந்நாட்டின் தேசிய கவிஞரான லூயிஸ் வாஸ் டே கமோயிஸின் கல்லறையில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். அந்நாட்டில் 16-ஆம் நூற்றாண்டு கட்டட கலையின் தலைசிறந்த படைப்பான ஜெரோனிமோஸ் மடாலயத்தையும் அவா் பாா்வையிட்டாா்.

போா்ச்சுகல் அதிபரின் அதிகாரபூா்வ இல்லத்தில் முா்முவும் மாா்செலோவும் சந்தித்து பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். பின்னா் இருவரும் கூட்டாக சிறப்பு நினைவு தபால்தலைகளை வெளியிட்டனா்.

இந்தச் சந்திப்பை தொடா்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘போா்ச்சுகல் அதிபரும் நானும் உலக மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளில் இந்தியா, போா்ச்சுகல் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் தீா்மானித்தோம்’ என்று குடியரசுத் தலைவா் முா்மு தெரிவித்தாா்.

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு

புது தில்லி: சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத்தந்த விவகாரம் மற்றும் ஏா்செல்-மேக்சிஸ் நிறுவன முறைகேடு ஆகிய வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டைப் பதிவு செ... மேலும் பார்க்க