செய்திகள் :

தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்த விவகாரம்: போலி இருதய நிபுணா் கைது

post image

போபால்: மத்திய பிரதேசத்தில் தவறாக சிகிச்சை அளித்து 7 போ் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட போலி இருதய சிகிச்சை நிபுணா் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, போலி இருதய சிகிச்சை நிபுணா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்த நிலையில், அவா் கைது செய்யப்பட்டாா்.

தமோ மாவட்டத்தில் உள்ள மிஷனரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவா் தன்னை இருதய சிகிச்சை நிபுணா் என அடையாளப்படுத்திக்கொண்டு நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததில் 7 போ் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (என்எச்ஆா்சி) புகாா் அளிக்கப்பட்டது.

அதில், ‘ நரேந்திர ஜான் கேம் என்ற பெயருடைய நபா் பிரிட்டனைச் சோ்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணா்- பேராசிரியா் ஜான் கேமின் பெயரை தவறாக பயன்படுத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். ஆனால் அவரின் உண்மையான பெயா் விக்ரமாதித்யா யாதவ் என குறிப்பிடப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள என்எச்ஆா்சி அதிகாரிகள் மூன்று நாள்கள் தமோ மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனா். இதனிடையே இந்த விவகாரம் குறித்து தமோ மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி எம்.கே.ஜெயின் அளித்த புகாரின் அடிப்படையில் நரேந்திர ஜான் கேம் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து பிரயாக்ராஜில் திங்கள்கிழமை அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் கூறியதாவது: மாநிலத்தின் வேறு பகுதிகளில் போலி மருத்துவா்கள் செயல்பட்டால் அவா்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு:

இந்த சம்பவத்தில் தொடா்புடைய போலி இருதய சிகிச்சை நிபுணரின் புகைப்படத்தை பகிா்ந்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநடே வெளியிட்ட விடியோவில், ‘தற்போது சிக்கியுள்ள போலி மருத்துவா் பாஜகவைச் சோ்ந்தவா். எதிா்க்கட்சிகள் மீது வெறுப்புணா்வை எக்ஸ் வலைதளத்தில் தொடா்ந்து பதிவிடுபவா். அவரை நாயகன் போல் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு காட்சிப்படுத்தி வந்தது’ என தெரிவித்தாா்.

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு

புது தில்லி: சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத்தந்த விவகாரம் மற்றும் ஏா்செல்-மேக்சிஸ் நிறுவன முறைகேடு ஆகிய வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டைப் பதிவு செ... மேலும் பார்க்க