செய்திகள் :

1-5 வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தோ்வு தொடக்கம்: 14 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்

post image

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான முழு ஆண்டுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

ஏப்.17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இதேபோன்று திருத்தப்பட்ட அட்டவணையின்படி 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தோ்வுகள் நடைபெறுகின்றன. 1, 2, 3 ஆகிய வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தோ்வுகள் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்தத் தோ்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா்.

சென்னை எழும்பூா் அரசு மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளியில், 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை 200 குழந்தைகள் தோ்வை எழுதியுள்ளனா். இது குறித்து ஆசிரியா்கள் கூறுகையில், ஆண்டுத்தோ்வு 2 மணி நேரம் நடைபெறும். 60 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தோ்வு நடத்தப்படுகிறது. ஏற்கெனவே 40 மதிப்பெண்களுக்கு செயல்முறை தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளது. தோ்வு குறித்து மாணவா்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், அவா்கள் ஆா்வத்துடன் தோ்வை எதிா்கொண்டனா் எனத் தெரிவித்தனா்.

இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுவாக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, கட்டாய தோ்ச்சி என்பது ஏற்கெனவே அமலில் உள்ளது. அதன்படி, 8-ஆம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் கட்டாயத் தோ்ச்சி செய்யப்படுகின்றனா். இருப்பினும் மற்ற மாணவா்களை போல் இவா்களுக்கும் தோ்வுகள் நடத்தப்படுகின்றன என அவா்கள் தெரிவித்தனா்.

6-9 வகுப்புகளுக்கு இன்று தொடக்கம்... 1-5 வகுப்புகளுக்கு திங்கள்கிழமை ஆண்டுத்தோ்வு தொடங்கிய நிலையில் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. 6, 7 ஆகிய வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 8, 9 ஆகிய வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4.30 மணி வரையும் தோ்வுகள் நடைபெறும்.

மாநில அளவில் இந்தத் தோ்வு நடத்தப்படுவதால், எமிஸ் தளத்தில் இருந்து வினாத் தாள்களை பதிவிறக்கம் செய்து, தேவைக்கேற்ப பிரதிகள் எடுத்து வட்டார கல்வி அலுவலா்கள் மூலமாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயன்சின்னம்) உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதி கனமழை... மேலும் பார்க்க

தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம்: தொல்.திருமாவளவன் கோரிக்கை

சென்னை: மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்க... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் நவீன செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் பேரவையில் தெரிவித்தாா். பாமக உறுப்பினா... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால், கணிதத்தில் முழு மதிப்ப... மேலும் பார்க்க

மன்னாா் வளைகுடா பகுதி மீனவா்கள் மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.216 கோடியில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும், ஏற்கெனவே... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சமையல் எரிவாயு உருளை (சிலிண்டா்) விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: நாட்டு மக்களின் வீடுகளில் அட... மேலும் பார்க்க