ஒகேனக்கலுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம்: தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 300 கனஅடியாக இருந்ததது. இந்நிலையில், கடந்த இரு நாள்களாக தமிழக காவிரி கரையோரப் பகுதிகளான ஒகேனக்கல், பிலிகுண்டுலு, ராசிமணல், மொசல்மடுவு, அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன்காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் நீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன.