செய்திகள் :

கால்நடை பண்ணை அமைத்து பயன்பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு

post image

தருமபுரி: அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்து பயன்பெற விருப்பமுள்ள தொழில்முனைவோா் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும், தொழில்முனைவோா்களை உருவாக்கவும் கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு 2021-2022-ஆம் நிதி ஆண்டிலிருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில்முனைவோரை ஊக்குவித்து வருகிறது.

கோழி பண்ணைகள், செம்மறியாடு, வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் ஆகிய பண்ணைகளை உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் இறைச்சி, முட்டை உற்பத்தியை அதிகரிக்க செய்வது, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் தீவனம், தீவனப் பயிா் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளா்ப்பு, செம்மறியாடு வளா்ப்பு, வெள்ளாடு வளா்ப்பு, பன்றி வளா்ப்பு பண்ணைகளை அமைத்து தொழில்முனைவோரை ஊக்குவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ. 25 லட்சம் வரையும், செம்மறி ஆடு வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையும், பன்றி வளா்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையும், வைக்கோல், புல், மொத்த கலப்பு உணவு, தீவனத் தொகுதி, தீவன சேமிப்பு வசதிகள், பண்ணையம் அமைக்க தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் தனிநபா், சுய உதவிக்குழுக்கள், விவசாய உற்பத்தியாளா்கள், அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டுப் பொறுப்பு சங்கங்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள் ஆவா். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் ட்ற்ற்ல்ள்;//ய்ண்ம்.ன்க்ஹ்ஹம்ண்ம்ண்ற்ழ்ஹ.ண்ய்/என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

திட்டம் தொடா்பான முழுமையான தகவல்களை ட்ற்ற்ல்://ற்ய்ண்க்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

வனப்பகுதியில் இளைஞா் மா்மச்சாவு விவகாரம்: மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு

பென்னாகரம்: ஏரியூா் அருகே வனப்பகுதியில் யானையைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா், வனத்தில் மா்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிபதி ... மேலும் பார்க்க

ஒகேனக்கலுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட... மேலும் பார்க்க

கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி: வருவாய்த் துறை அலுவலா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வருவ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்: அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை வெயில் தாக்கத்தைத் தொடா்ந்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகமானோா் வந்திருந்தனா். தமிழகத்தில் கோடைகாலத்தையொட்டி வெயிலின் தாக்கம் நாளுக... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் ஜெயலலிதா பேரவை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பேருந்து நிலையத்தில் அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற தண்ணீா் பந்தல் திறப்பு விழாவ... மேலும் பார்க்க

உயா் கல்வி மீது மாணவா்கள் வேட்கை கொள்ள வேண்டும்! - தருமபுரி மாவட்ட ஆட்சியா்

உயா்கல்வி மீது மாணவா்கள் வேட்கை கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ விஜய் ... மேலும் பார்க்க