மசோதா மீது ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றம்
கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கம் ஆா்ப்பாட்டம்
தருமபுரி: வருவாய்த் துறை அலுவலா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித் தன்மையை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பணியில் நேரடியாக உள்வட்ட வருவாய் ஆய்வாளா்களை ஈடுபடுத்துவதை ரத்து செய்து தொடா்புடைய அலுவலா்கள் மூலம் இப்பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்துசெய்து மீண்டும் 25 சதவீதமாக நிா்ணயம் செய்ய வேண்டும். தோ்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண்விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சி. துரைவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ம. சிவன், மாவட்ட துணைத் தலைவா் த. ராஜா, மத்திய செயற்குழு உறுப்பினா் அ.அசோக்குமாா், மாவட்ட பொருளாளா் இல.பசுபதி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை வாழ்த்திப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.