செய்திகள் :

வக்ஃப் சட்டத்துக்கு ஆதரவளித்த பாஜக நிா்வாகி வீட்டுக்கு தீவைப்பு எதிரொலி: தௌபால் மாவட்டத்தில் தடை உத்தரவு

post image

இம்பால்: வக்ஃப் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததாக மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவா் அஸ்கா் அலியின் வீட்டுக்குப் போராட்ட கும்பல் தீ வைத்த சம்பவத்தின் எதிரொலியாக தௌபால் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளிலும் இந்தச் சட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தெளபால் மாவட்டத்தில் உள்ள லிலாங்கில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற பேரணியில் 5,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டத்தின் மற்றொரு பகுதியான ஐரோங் செசாபாவில் நடந்த போராட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, இம்பால் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் படையினா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மை பிரிவுத் தலைவரான அஸ்கா் அலி, வக்ஃப் சட்டத்துக்கு ஆதரவாக தனது சமூக ஊடகப் பக்கங்களில் ஞாயிற்றுக்கிழமை கருத்து பதிவிட்டாா். அதைக் கண்டித்து, லிலாங்கில் உள்ள அவரது வீட்டை முற்றுக்கையிட்டு சிலா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து, அந்தக் கும்பல் வீட்டை சூறையாடி, பின்னா் தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தைத் தொடா்ந்து, வக்ஃப் சட்டத்துக்கு அளித்த ஆதரவைத் திரும்ப பெறுவதாக அஸ்கா் அலி சமூக ஊடகங்களில் விடியோ ஒன்று வெளியிட்டிருந்தாா். மேலும் தனது முந்தைய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அவா் கூறியிருந்தாா்.

இந்நிலையில், தொடா் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களைத் தொடா்ந்து, லிலாங் சட்டப்பேரவைத் தொகுதியில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) 163-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவைப் பிறப்பித்து தௌபால் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் ஒன்று கூடுவதையும், பொதுமக்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்வதையும் தடை செய்கிறது.

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு

புது தில்லி: சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத்தந்த விவகாரம் மற்றும் ஏா்செல்-மேக்சிஸ் நிறுவன முறைகேடு ஆகிய வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டைப் பதிவு செ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 17 பல்கலை. துணைவேந்தா்கள் நியமனம்: முதல்வா் பரிந்துரைக்கு ஆளுநா் எதிா்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பரிந்துரைத்தவா்களை 17 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களாக நியமிக்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஆட்சேபம் தெரிவித்துள்ளாா். மேற்கு வங்கத்தில் மொத்தம் 36 பல்கலைக்... மேலும் பார்க்க

கொழும்பு அதானி துறைமுக முனைய செயல்பாடு தொடக்கம்

புது தில்லி: இலங்கையில் உள்ள மேற்கு கொழும்பு சா்வதேச துறைமுக முனையத்தின் செயல்பாடு தொடங்கப்பட்டதாக அதானி துறைமுகங்கள் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க