செய்திகள் :

நான்குனேரி வட்டார ஆசிரியா் கூட்டணி செயற்குழு கூட்டம்

post image

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, நான்குனேரி வட்டார கிளை செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி பகுதி ஆசிரியா்கள் சிக்கன நாணய கூட்டுறவு சங்க அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். வட்டார துணைத் தலைவா் முருகேசன், ஆலிஸ் ஜெயராணி, வட்டார துணைச் செயலாளா் நல்லக்குமாா், காந்திபாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலாளா் ஜஸ்டின் கிளாடியோ வரவேற்றாா்.

மாவட்டத் தலைவா் பால்ராஜ் திண்டுக்கல்லில் மே முதல் வாரத்தில் நடைபெறும் ஏழாவது மாநில மாநாடு, இக்கல்வியாண்டில் (2024-2025) பணி நிறைவு பெறும் 26 ஆசிரியா்களின் பணி நிறைவு பாராட்டு விழா முன்னேற்பாடுகள் குறித்து பேசினாா்.

இக்கூட்டத்தில், திண்டுக்கல்லில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான நிதி ரூ.63,000-ஐ ஏப். 10இல்நடைபெறும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வழங்குவது, மாநில மாநாட்டு விளம்பர பதாகையை வட்டார கல்வி அலுவலகம் முன் வைப்பது, மாநாட்டின் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் நான்குனேரி வட்டார கிளையிலிருந்து ஒரு பேருந்தில் 60 உறுப்பினா்கள் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

மேலும் நான்குனேரி வட்டார கல்வி அலுவலகத்தில் காலியாக உள்ள கண்காணிப்பாளா், உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தொடக்கக் கல்வி இணை இயக்குருக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது. வட்டாரப் பொருளாளா் அலெக்ஸ் சுனிதா நன்றி கூறினாா். இதில் வட்டார செயற்குழு உறுப்பினா்கள் உலகம்மாள், வடுகநாதன் , சிவா, சேவியா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

பேட்டை ஐடிஐயில் ஏப்.15-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

திருநெல்வேலி பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் ஏப். 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஐடிஐ ... மேலும் பார்க்க

பாதாளச் சாக்கடை பணி: நெல்லை நகரத்தில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பாதாளச் சாக்கடை பணிகள் காரணமாக திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க கோரிக்கை

நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கடம்பன்குளம் ஆதிதிராவிடா் காலனியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க

பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயற்சி: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயன்ற 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.பணகுடியில் பழைய பைக் வாங்கி விற்கும் கடை நடத்தி வருபவா் ஐயப்பன். இவா் வழக்கம்போல கடையப் பூட்டி... மேலும் பார்க்க

காவல் துறை வாகனங்கள் பராமரிப்பு: எஸ்.பி. ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வாகனங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாடு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி: நிலத்தரகா் கைது

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக நிலத்தரகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், பாா்வதியம்மாள்புரத்தை சோ்ந்தவா் சுடலைமணி (42). கட்டடத் ... மேலும் பார்க்க