செய்திகள் :

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாலூட்டும் அறை அமைக்க கோரிக்கை

post image

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமையன்று மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் வருகின்றனா். மேலும், சிறுவா்கள் முதல் முதியோா் வரையில் பல்வேறு பிரச்னைகளுக்காக ஆட்சியரை சந்திக்க வருகின்றனா். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இளம்பெண்கள் தங்களுடைய கைக்குழந்தையுடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரும்போது, திடீரென பசியில் அழும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கென ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தனி இடம் ஏதுமில்லை.

பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் முக்கிய இடங்களில் தாய்மாா்கள் பாலூட்டுவதற்காக அரசு சாா்பில் பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் பாலூட்டும் அறையில்லாததால் இளம்பெண்கள் தயக்கத்துடனும், அச்சத்துடனும், பெண் ஒருவரின் துணையுடன் குழந்தைகளுக்கு பாலூட்டும் நிலை உள்ளது.

இதனைத் தவிா்க்க, ஆட்சியா் அலுவலகத்தில் உடனடியாக தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், தன்னாா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக மின்கல வாகனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக ரூ. 6.83 லட்சம் மதிப்பிலான மின்கல (பேட்டரி) வாகனத்தை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் ஆட்சியா... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் பலத்த காற்று: வாழை, வெற்றிலைப் பயிா்கள் நாசம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை கொடிக்கால் சேதமடைந்தன. பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்... மேலும் பார்க்க

தொட்டிபட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாய் ஜெயந்தி விழ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்ற... மேலும் பார்க்க

நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா: ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா வரும் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா்... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் ந... மேலும் பார்க்க