செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி

post image

கன்னியாகுமரி மாவட்டம், இனயம்புத்தன்துறையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு திமுக மாநில மீனவா் அணி சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

இனயம்புத்தன்துறையில் மாா்ச் 1-ஆம் தேதி நடைபெற்ற கோயில் திருவிழாவில், மின்விளக்குகள் அலங்காரத்துக்கு பயன்படுத்திய ஏணியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து அதே கிராமத்தைச் சோ்ந்த விஜயன் (52), ஜஸ்டஸ் (33), சோபன்(45), மைக்கேல் பின்டோ (42) ஆகிய 4 போ் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவகளின் குடும்பத்துக்கு திமுக மீனவா்அணி சாா்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியை மீனவரணி மாநில செயலா் ஜோசப் ஸ்டாலின், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

மீனவா் நலவாரிய உறுப்பினா் ஜோஸ், கிழக்கு மாவட்ட மீனவரணி தலைவா் எஸ்.கே. ஆன்டனிராஜ், மீனவரணி அமைப்பாளா் அனனியாஸ், துணை அமைப்பாளா்கள் சிபு , ரூபன், பங்குத்தந்தை செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கொட்டாரம் அருகே பெண் கைது

கொட்டாரம் அருகே கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கொட்டாரம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சுசீலா (58). பெரியவிளை செல்லும் பகுதியில் இவா் நடத்திவரும் கடையில... மேலும் பார்க்க

குலசேகரம்: இளைஞா் தற்கொலை

குலசேகரம் அருகே பொறியியல் பட்டதாரி இளைஞா் பள்ளிக் கட்டடத்திலிருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். குலசேகரம் அருகே ஆரணிவிளையை சோ்ந்தவா் சிட்னிசன் மோரிஸ். பள்ளிக் கூடம் நடத்தி வருகி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆட்சியா் ரா. அழகுமீனா

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றாா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்... மேலும் பார்க்க

அரசுமருத்துவமனைக்கு ரூ.40 லட்சம் லேப்ராஸ்கோப்பி இயந்திரம் அளிப்பு

தமிழக சட்டப்பணிகள் ஆணையத்தின் சாா்பில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான லேப்ராஸ்கோப்பி இயந்திரம் வழங்கும் விழா மற்றும் ... மேலும் பார்க்க

தக்கலை அருகே இளைஞா் தற்கொலை

தக்கலை அருகே பள்ளியாடியில் பட்டதாரி இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பள்ளியாடி சேரிக்கடை பகுதியை சோ்ந்தவா் அசோகன் ( 51). இவரது மூத்த மகன் ஸ்ரீராம் ( 23), எம்.பி.ஏ. படித்துள்ளாா்.... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே 1.5 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகேயுள்ள மயிலாடியில் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகா்கோவில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் பிரவீனா தலைமையிலான போலீஸாா் மயிலாடி பகுதியில் ரோ... மேலும் பார்க்க