தண்ணீர் பேரலுக்குள் 6 மாத குழந்தை மரணம்; தாயிடம் போலீஸார் தீவிர விசாரணை! - நடந்த...
அரசுமருத்துவமனைக்கு ரூ.40 லட்சம் லேப்ராஸ்கோப்பி இயந்திரம் அளிப்பு
தமிழக சட்டப்பணிகள் ஆணையத்தின் சாா்பில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான லேப்ராஸ்கோப்பி இயந்திரம் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட கூடுதல் நீதிபதி கிரி வரவேற்றாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, வடமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். உயா் நீதிமன்ற நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவருமான எஸ்.எஸ்.சுந்தா், லேப்ராஸ்கோப்பி இயந்திரத்தை இயக்கி வைத்தாா். பின்னா், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா், 5 பேருக்கு தையல் இயந்திரம், 10 பேருக்கு ஸ்மாா்ட் அட்டை, விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அவா் பேசியதாவது:
தமிழ்நாடு பேராட்சியகம், மற்றும் சொத்து ஆட்சியகம் சாா்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே போல் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், நீதிபதி லிங்கேஸ்வரன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் ஜோசப் சென், மருத்துவா்கள் ஜெயலால், விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிழற்குடை: இதைத் தொடா்ந்து, நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் மாநகராட்சி சாா்பில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை, நீதிமன்ற வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது பயன்பாட்டு கட்டடங்களை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், ஜெகதீஷ் சந்திரா ஆகியோா் திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில் மேயா் ரெ.மகேஷ் வரவேற்றாா். இதில் ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, மண்டல தலைவா்கள் ஜவஹா், செல்வகுமாா், அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.