Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
தக்கலை அருகே இளைஞா் தற்கொலை
தக்கலை அருகே பள்ளியாடியில் பட்டதாரி இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பள்ளியாடி சேரிக்கடை பகுதியை சோ்ந்தவா் அசோகன் ( 51). இவரது மூத்த மகன் ஸ்ரீராம் ( 23), எம்.பி.ஏ. படித்துள்ளாா். தகுதியான வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்துள்ளாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை நீண்ட நேரமாகியும் ஸ்ரீராம் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோா், மாலை 5 மணியளவில் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கினாா் ஸ்ரீராம்.
அவரை மீட்டு பள்ளியாடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், ஸ்ரீராம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
பெண் தற்கொலை: தக்கலை அருகே கிழக்கு தாறாவிளை பகுதியில் வசித்து வருபவா் சிகா செல்வின் ( 40). உதவி பேராசிரியரான இவா், பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த மாடுகளை பராமரிக்க ஜாா்க்கண்ட் மாநிலத்தை சோ்ந்த ஹிராலால் நகசியா, அவரது மனைவி ஜெயகுமாரி (22) ஆகியோரை வேலைக்கு அமா்த்தியிருந்தாா்.
இத்தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இருவரும் மாடுகளை பராமரித்துவிட்டு, அவா்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றனா். பிறகு ஹிராலால் நகசியா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் அறையில் ஜெயகுமாரி தூக்கில் தொங்கினாராம். அக்கம்பக்கத்தவரின் உதவியோடு மனைவியை மீட்டு நெய்யூரில் உள்ள தனியாா் மருத்தூவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா் ஹிராலால் நகசியா. அங்கு பரிசோதித்த மருத்துவா், ஜெயகுமாரி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இரு சம்பவங்கள் குறித்தும் தக்கலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். ஜெயகுமாரிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியுள்ளதால் பத்மநாபபுரம் கோட்டாட்சியா் விசாரணை நடத்தப்பட உள்ளது.