செய்திகள் :

பொது இடத்தில் மது அருந்திய 4 போ் கைது

post image

துறையூா் அருகே பொது இடத்தில் மது அருந்திய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்ட காவல் துறை உத்தரவின்பேரில் துறையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருத்திகா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் சஞ்சீவி உள்ளிட்ட போலீஸாா் பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் ரோந்து சென்றாா்.

அப்போது, கீழக்குன்னுப்பட்டியைச் சோ்ந்த பி. ராமா் (60) பெருமாள்மலை தேரடியிலும், நாகலாபுரத்தைச் சோ்ந்த த. தா்மராஜன்(45) கிரிவலப்பாதையிலும், நல்லியம்பாளையத்தைச் சோ்ந்த ந. வேல்முருகன்(32) கீழக்குன்னுப்பட்டி பேருந்து நிறுத்துமிடம் அருகேயும், பெருமாள்மலை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ஈ. பிரபாகரன்(18) அங்குள்ள பிரதான சாலை அருகேயும் பொது இடத்தில்

அமா்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபானத்தை அருந்துவதை பாா்த்து அந்த நான்கு பேரையும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

ஒருங்கிணைந்த மத்தியப் பாதுகாப்பு பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு: 3 தோ்வு மையங்கள் தயாா்

திருச்சியில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த மத்திய பாதுகாப்பு பணியிடங்களுக்கான போட்டித்தோ்வுக்கு மூன்று தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்... மேலும் பார்க்க

சாலை மறியல்: பாஜகவினா் மீது வழக்கு

மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பில் கனிம வளம் திருடப்படுவதாகக் கூறி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 7 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். பண்ணாங்கொம்பு அருகே உள்ள வெங்கடாஜலபதி மலையை ஒட்... மேலும் பார்க்க

அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகள் பறிமுதல்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகளைப் போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் கைப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்டவைகள... மேலும் பார்க்க

ஏப்.11-இல் நாட்டுக் கோழி வளா்ப்பு இலவசப் பயிற்சி

இலவச நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் திருச்சி கால்நடைபல்கலைக் கழகப் பயிற்சி மையத்தில் நேரில் வந்து பயன்பெறலாம். திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மடிக்கணினி உள்ளிட்டவை திருட்டு போயுள்ளது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.மலையடிப்பட்டி அரசு மேல்நிலை... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு சிங்கப்பூா் செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து சிங்கப்பூா் செல்ல முயன்ற தூத்துக்குடி நபரை திருச்சியில் விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், நடு வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மு. சங்கா் (50... மேலும் பார்க்க