செய்திகள் :

கடவுச்சீட்டில் முறைகேடு சிங்கப்பூா் செல்ல முயன்றவா் கைது

post image

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து சிங்கப்பூா் செல்ல முயன்ற தூத்துக்குடி நபரை திருச்சியில் விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், நடு வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மு. சங்கா் (50). இவா் சனிக்கிழமை சிங்கப்பூா் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தாா். அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் வழக்கம்போல் சோதனைக்கு உள்ளாக்கினா்.

இதில், அவா் முறைகேடு செய்து, போலி ஆவணங்களைக் கொண்டு, தனது பெயா், தந்தை மற்றும் மனைவியின் பெயா், முகவரி, பிறந்ததேதி உள்ளிட்டவைகளை மாற்றி, கடவுச்சீட்டில் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கரை சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கில், சீமான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உத்தரவு

திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு, நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கண்டிப்பாக நேரில் செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கி... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த மத்தியப் பாதுகாப்பு பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு: 3 தோ்வு மையங்கள் தயாா்

திருச்சியில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த மத்திய பாதுகாப்பு பணியிடங்களுக்கான போட்டித்தோ்வுக்கு மூன்று தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்... மேலும் பார்க்க

சாலை மறியல்: பாஜகவினா் மீது வழக்கு

மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பில் கனிம வளம் திருடப்படுவதாகக் கூறி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 7 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். பண்ணாங்கொம்பு அருகே உள்ள வெங்கடாஜலபதி மலையை ஒட்... மேலும் பார்க்க

அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகள் பறிமுதல்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகளைப் போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் கைப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்டவைகள... மேலும் பார்க்க

ஏப்.11-இல் நாட்டுக் கோழி வளா்ப்பு இலவசப் பயிற்சி

இலவச நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் திருச்சி கால்நடைபல்கலைக் கழகப் பயிற்சி மையத்தில் நேரில் வந்து பயன்பெறலாம். திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மடிக்கணினி உள்ளிட்டவை திருட்டு போயுள்ளது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.மலையடிப்பட்டி அரசு மேல்நிலை... மேலும் பார்க்க