செய்திகள் :

திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கில், சீமான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உத்தரவு

post image

திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு, நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கண்டிப்பாக நேரில் செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) வீ. வருண்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக விமா்சனம் செய்தது தொடா்பாக சீமான் மீது, திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணை திருச்சி 4-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், சீமான் திங்கள்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த முறை விசாரணையின்போது நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். இந் நிலையில் திங்கள்கிழமை காலை சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் அவா் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை மாலை ஒத்திவைத்தாா்.

தொடா்ந்து மாலை நடைபெற்ற விசாரணையின்போது சீமானின் வழக்குரைஞா் ஆஜராகி, சென்னையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதால் சீமானால் நேரில் ஆஜராக இயலவில்லை என்றும், செவ்வாய்க்கிழமை அவா் ஆஜராவாா். அதுவரை அவருக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தாா்.

இதையடுத்து சீமான் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில், நீதிமன்றம் சட்டத்துக்குள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று நீதிபதி விஜயா உத்தரவிட்டாா். இந்த வழக்கு விசாரணையில், டிஐஜி வருண்குமாா் தனது வழக்குரைஞா் முரளிகிருஷ்ணாவுடன் ஆஜரானாா்.

ஒருங்கிணைந்த மத்தியப் பாதுகாப்பு பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு: 3 தோ்வு மையங்கள் தயாா்

திருச்சியில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த மத்திய பாதுகாப்பு பணியிடங்களுக்கான போட்டித்தோ்வுக்கு மூன்று தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்... மேலும் பார்க்க

சாலை மறியல்: பாஜகவினா் மீது வழக்கு

மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பில் கனிம வளம் திருடப்படுவதாகக் கூறி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 7 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். பண்ணாங்கொம்பு அருகே உள்ள வெங்கடாஜலபதி மலையை ஒட்... மேலும் பார்க்க

அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகள் பறிமுதல்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகளைப் போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் கைப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்டவைகள... மேலும் பார்க்க

ஏப்.11-இல் நாட்டுக் கோழி வளா்ப்பு இலவசப் பயிற்சி

இலவச நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் திருச்சி கால்நடைபல்கலைக் கழகப் பயிற்சி மையத்தில் நேரில் வந்து பயன்பெறலாம். திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மடிக்கணினி உள்ளிட்டவை திருட்டு போயுள்ளது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.மலையடிப்பட்டி அரசு மேல்நிலை... மேலும் பார்க்க

பொது இடத்தில் மது அருந்திய 4 போ் கைது

துறையூா் அருகே பொது இடத்தில் மது அருந்திய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்ட காவல் துறை உத்தரவின்பேரில் துறையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருத்திகா மற்றும் சிறப்பு உதவி ஆய்வ... மேலும் பார்க்க