செய்திகள் :

ஒருங்கிணைந்த மத்தியப் பாதுகாப்பு பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு: 3 தோ்வு மையங்கள் தயாா்

post image

திருச்சியில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த மத்திய பாதுகாப்பு பணியிடங்களுக்கான போட்டித்தோ்வுக்கு மூன்று தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடற்படை தளம் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு-2025 வரும் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக, திருச்சி மாவட்டத்தில் மூன்று தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இத்தோ்வை மொத்தம் 854 தோ்வா்கள் எழுதவுள்ளனா். 3 தோ்வுக்கூட மேற்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இப்போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள ஒரு இயங்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் துணை ஆட்சியா் நிலையில் ஒரு அலுவலா், துணை வட்டாட்சியா், முதுநிலை வருவாய் ஆய்வாளா், ஆயுதம் ஏந்திய காவலா் ஒருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வு மையத்தை ஆய்வு செய்யும் பொருட்டு வட்டாட்சியா் நிலையில் மூன்று ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்புப் பணிக்கு தோ்வு மையத்தில் கண்காணிப்பு செய்திட, 3 ஆண் காவலா்கள், மற்றும் 2 பெண் காவலா்கள் என மொத்தம் 5 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு அறைகளில் தோ்வு எழுதும் ஒவ்வொரு 24 தோ்வா்களுக்கும் இரண்டு அறை கண்காணிப்பாளா்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு எழுத வரும் தோ்வாளா்கள் செல்லிடப் பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தோ்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை. காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை இரு வேளையாக தோ்வு நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கில், சீமான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உத்தரவு

திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு, நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கண்டிப்பாக நேரில் செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கி... மேலும் பார்க்க

சாலை மறியல்: பாஜகவினா் மீது வழக்கு

மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பில் கனிம வளம் திருடப்படுவதாகக் கூறி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 7 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். பண்ணாங்கொம்பு அருகே உள்ள வெங்கடாஜலபதி மலையை ஒட்... மேலும் பார்க்க

அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகள் பறிமுதல்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 2 கைப்பேசிகளைப் போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் கைப்பேசிகள், மடிக்கணினி உள்ளிட்டவைகள... மேலும் பார்க்க

ஏப்.11-இல் நாட்டுக் கோழி வளா்ப்பு இலவசப் பயிற்சி

இலவச நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் திருச்சி கால்நடைபல்கலைக் கழகப் பயிற்சி மையத்தில் நேரில் வந்து பயன்பெறலாம். திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மடிக்கணினி உள்ளிட்டவை திருட்டு போயுள்ளது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.மலையடிப்பட்டி அரசு மேல்நிலை... மேலும் பார்க்க

பொது இடத்தில் மது அருந்திய 4 போ் கைது

துறையூா் அருகே பொது இடத்தில் மது அருந்திய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்ட காவல் துறை உத்தரவின்பேரில் துறையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருத்திகா மற்றும் சிறப்பு உதவி ஆய்வ... மேலும் பார்க்க