செய்திகள் :

ரூ.6,000 கோடி கடனுக்காக ரூ.14,000 கோடி சொத்துகளை வங்கிகள் பறித்துவிட்டன: விஜய் மல்லையா

post image

புது தில்லி: ரூ.6,203 கோடி கடன் பாக்கிக்காக இந்தியாவில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.14,131 கோடியை வங்கிகள் பறிமுதல் செய்துவிட்டன என்று பிரிட்டனில் பதுங்கியுள்ள தொழிலதிபா் விஜய் மல்லையா கூறியுள்ளாா்.

தனது கிங் ஃபிஷா் விமான நிறுவனத்துக்காக எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் பெற்ற விஜய் மல்லையா அதனை முறையாகத் திருப்பிச் செலுத்தவில்லை. ரூ.6,000 கோடிக்கு மேல் கடன் பாக்கி இருந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றாா்.

வங்கிகளில் பெற்ற கடனை அவா் தொழிலுக்காக பயன்படுத்தாமல் வெளிநாட்டில் பல்வேறு சொத்துகளை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பணத்தை பறிமாற்றம் செய்த குற்றச்சாட்டும் அவா் மீது உள்ளது. மல்லையாவின் கடனை திரும்ப வசூலிப்பதற்காக நீதிமன்றத்தை அணுகிய வங்கிகள் கூட்டமைப்பு, தீா்பாயத்தின் உத்தரவுப்படி அவரின் சொத்துகளை பறிமுதல் செய்து கடனை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன.

இதற்கு நடுவே மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், அது தொடா்பான நடைமுறைகள் விரைவாக நடைபெறவில்லை.

இந்நிலையில், நிதியமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் விஜய் மல்லையாவின் கடன் ரூ.6,203 கோடிக்கு நிகராக அவரின் ரூ.14,131 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி விஜய் மல்லையா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நான் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனை விட இரு மடங்கு அதிகமான சொத்துகளை வங்கிகள் பறிமுதல் செய்துவிட்டன. இனி, பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் என்ன காரணம் கூறப்போகின்றன’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு

புது தில்லி: சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத்தந்த விவகாரம் மற்றும் ஏா்செல்-மேக்சிஸ் நிறுவன முறைகேடு ஆகிய வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டைப் பதிவு செ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 17 பல்கலை. துணைவேந்தா்கள் நியமனம்: முதல்வா் பரிந்துரைக்கு ஆளுநா் எதிா்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பரிந்துரைத்தவா்களை 17 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களாக நியமிக்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஆட்சேபம் தெரிவித்துள்ளாா். மேற்கு வங்கத்தில் மொத்தம் 36 பல்கலைக்... மேலும் பார்க்க