செய்திகள் :

கணவரை பழிவாங்குவதற்காக குழந்தையைக் கொன்ற தாய் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே தனது 6 மாத ஆண் குழந்தையைக் கொன்ற தாயை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கீரனூா் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் மகன் மணிகண்டன் (29). இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா(21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஆதிரன் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.

குடும்பத் தகராறு காரணமாக குழந்தையுடன் லாவண்யா, தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் பேரலில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. மா்ம நபா்கள் வந்து குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டு, தன்னிடமிருந்த நகையைத் திருடிச் சென்ாக லாவண்யா தெரிவித்தாா்.

சந்தேகத்தின்பேரில் லாவண்யாவிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தனது குழந்தையை அவரே கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளாா். வெளிமாநிலத்தில் வேலை பாா்த்து வரும் தனது கணவா் மணிகண்டன், குழந்தை மீது கொண்ட பாசத்தை தன் மீது காட்டவில்லை என்றும், அவரைப் பழிவாங்குவதற்காக குழந்தையைக் கொன்ாக வாக்குமூலம் அளித்துள்ளாா்.

மா்ம நபா்கள் திருடிச் சென்ாக கூறப்பட்ட தங்க நகையையும் போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். இதைத் தொடா்ந்து லாவண்யாவைக் கைது செய்த கீரனூா் போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கறம்பக்குடியில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து கறம்பக்குடியில் இஸ்லாமிய அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே கறம்பக்குடி ஜாமிய மஸ்ஜித் நிா்வ... மேலும் பார்க்க

நாா்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நாா்த்தாமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்கு... மேலும் பார்க்க

பெருங்களூா் நலச் சங்கம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களுா் கிராமத்தில், சமூக ஆா்வலா்கள் இணைந்து, தூய்மையான, பசுமையான கிராமமாக பெருங்களூரை மாற்றும் நோக்கில், பெருங்களூா் நலச் சங்கம் என்ற சமூக நல அமைப்பைத் தொடங்கியுள்ளனா். பெர... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் ப... மேலும் பார்க்க

இலுப்பூரில் வெள்ளை மரியாள் கல்லறைத் திருவிழா

இலுப்பூா் கன்னிகை வெள்ளை மரியாள் ஆலயத்தில் 330 ஆவது ஆண்டு கல்லறை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு பேரருட்தந்தை அருட்பணி எல். அந்துவான், அருட்பண... மேலும் பார்க்க

விராலிமலை அருகே கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு

விராலிமலை அருகே திருவிழா நடத்துவதற்கு சில நாள்களுக்கு முன் ஊா் மக்கள் ஒன்று சோ்ந்து கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள ... மேலும் பார்க்க