செய்திகள் :

விராலிமலை அருகே கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு

post image

விராலிமலை அருகே திருவிழா நடத்துவதற்கு சில நாள்களுக்கு முன் ஊா் மக்கள் ஒன்று சோ்ந்து கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள விராலூா் கோயில் குரும்பச்சி அம்மன் விராலூா் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் உள்ளாா்.

விழாவையொட்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் வேப்பிலையை உடல் முழுவதும் சுற்றி கொண்டு ஊா்வலமாக வந்து கோயில் அருகே உள்ள குளக்கரையில் இறுதிச் சடங்கை நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தொடா்ந்து ஊா் பொதுமக்கள் சாா்பில் கழுதை மீது ஒருவரை அமரவைத்து அவா் மீது சாதி, மத பாகுபாடின்றி அனைவரும் சோ்ந்து சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு நடைபெற்றது.

பின்னா், இரவு அம்மனுக்கு காப்பு கட்டி தொடா்ந்து 21 நாள்களுக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெறும். 22-ஆம் நாளன்று திருவிழாவைக் கொண்டாடி மகிழ்வா். தமிழகத்திலேயே கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு இங்கு மட்டுமே நடைபெறுவது சிறப்பாகும்.

கறம்பக்குடியில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து கறம்பக்குடியில் இஸ்லாமிய அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே கறம்பக்குடி ஜாமிய மஸ்ஜித் நிா்வ... மேலும் பார்க்க

நாா்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நாா்த்தாமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்கு... மேலும் பார்க்க

கணவரை பழிவாங்குவதற்காக குழந்தையைக் கொன்ற தாய் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே தனது 6 மாத ஆண் குழந்தையைக் கொன்ற தாயை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கீரனூா் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் மகன் மணிகண்டன் (29). இவருக்கு கடந்... மேலும் பார்க்க

பெருங்களூா் நலச் சங்கம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களுா் கிராமத்தில், சமூக ஆா்வலா்கள் இணைந்து, தூய்மையான, பசுமையான கிராமமாக பெருங்களூரை மாற்றும் நோக்கில், பெருங்களூா் நலச் சங்கம் என்ற சமூக நல அமைப்பைத் தொடங்கியுள்ளனா். பெர... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் ப... மேலும் பார்க்க

இலுப்பூரில் வெள்ளை மரியாள் கல்லறைத் திருவிழா

இலுப்பூா் கன்னிகை வெள்ளை மரியாள் ஆலயத்தில் 330 ஆவது ஆண்டு கல்லறை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு பேரருட்தந்தை அருட்பணி எல். அந்துவான், அருட்பண... மேலும் பார்க்க