செய்திகள் :

மத்திய பிரதேசம்: போலி இதய மருத்துவர்; பறிபோன 7 உயிர்கள்; தப்பித்த சில நோயாளிகள். நடந்தது என்ன?

post image

த்திய பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஜான் கெம் என்ற இதயநோய் நிபுணர் பணி செய்து வந்துள்ளார். இவர் செய்த இதய அறுவை சிகிச்சையால் ஒரே மாதத்தில் 7 பேர் இறந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

https://missionhospitaldamoh.org/
https://missionhospitaldamoh.org/

அதில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மிக பிரபலமான இதய நோய் நிபுணர் ஜான் கெம். இவர் தற்போது பிரிட்டனில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்ற நபர் தன்னுடைய அடையாளங்கள் அனைத்தையும் மறைத்து, 'தான் தான் பிரிட்டனின் பிரபலமான இதய நோய் நிபுணர் ஜான் கெம்' என ஆள் மாறாட்டம் செய்ததோடு, அதற்கேற்ப போலி ஆவணங்களையும் கொடுத்து மருத்துவராக பணியில் சேர்ந்திருக்கிறார்.

ஒரே மாதத்தில் 7 பேர் அறுவை சிகிச்சை செய்ததையடுத்து இறந்ததையொட்டி, டாமோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் தீபக் திவாரி புகார் அளித்ததன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மருத்துவமனையின் அனைத்து பதிவுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தீபக் திவாரி பேசுகையில், "இதுவரையில் அதிகாரபூர்வமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக இருந்தாலும், உண்மையில் இதைவிட அதிகமான நபர்கள் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த போலி மருத்துவரிடம் சிகிச்சை செய்துகொள்ளாமல் மருத்துவமனையைவிட்டு வெளியேறிய சிலர், 'தங்களது உறவினர்கள் உடல் நலக்குறைவினால் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, இந்த போலி மருத்துவரின் நடவடிக்கைகள் எங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியதால், எங்கள் உறவினரை வேறொரு மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறினார்கள்' என்றிருக்கிறார்.

பலி
பலி

இந்த போலி மருத்துவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, தனது குழுவுடன் இன்று (ஏப்ரல் 7) டாமோவுக்குச் செல்வார் என தெரிகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

குடும்பத் தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற போதை ஆசாமி - மணப்பாறையில் அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி மாலைமடைப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னகவுண்டா் மகன் சின்னதம்பி (வயது: 62). இவரது மனைவி செல்லம்மாள் (வயது: 48). இவா்களது கூட்டு நிலத்தை தமிழ்நாடு... மேலும் பார்க்க

கடலூர்: மூன்று முறை கருக்கலைப்பு… ஆபாசமாகப் பேசி, காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த விசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். 32 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற இளம்பெண்னை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தி... மேலும் பார்க்க

கடலூர்: `அவர் எனக்கும் புருஷன்தான்...’ - கணவரை உரிமை கொண்டாடிய அக்காவை கொலை செய்த தங்கை

கடலூர் சோழத்தரம் கிராமத்தை சேர்ந்தவர் மேகலைவன். இவருக்கு சரிதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். சரிதாவின் மூத்த சகோதரியான சங்கீதாவும் அதே பகுதியில்தான் வசித்து வந்தார். சங்கீதாவின் கணவர... மேலும் பார்க்க

சென்னையில் திருட்டு; வெளிநாட்டிலிருந்து கண்டுபிடித்த ஓனர் - வசமாக சிக்கிய பிரபல திருடர்கள்!

சென்னை அசோக்நகர், சீனிவாச பிள்ளை தெருவில் வசித்து வருபவர் வெங்கட்ரமணன் (58). இவர் தன்னுடைய மனைவியுடன் பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் அவரது மகள்களை பார்க்க கடந்த 4.4.2025-ம் தேதி சென்றார். 7-ம் தேதி அதிக... மேலும் பார்க்க

கோவை: கல்லூரி மாணவியுடன் பழகிய மாணவர் மீது கொலை வெறி தாக்குதல் - 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா, வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்த காரணத்தால் சொந்த அண்ணனே அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆணவ கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இ... மேலும் பார்க்க

கர்நாடகா: மனைவியைக் கொன்றதாகச் கணவனுக்குச் சிறை; உயிரோடு உலா வந்த மனைவி; என்ன நடந்தது?

இறந்த மனைவிக்காக இறுதிச்சடங்கு செய்த, துக்கம் அனுசரித்த கணவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இறந்ததாக நம்பப்பட்ட பெண் உயிரோடு நடமாடிய ஆதிர்ச்சி செய்தி வெளியாகி பரபரப்... மேலும் பார்க்க