செய்திகள் :

`சீமான் நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும்!' - வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

post image

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக, வருண் குமார் தரப்பு குற்றம்சாட்டி வந்தது. பதிலுக்கு, 'திரள்நிதி சீமான்' என்று சீமான் மீது சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டியதோடு, டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எஸ் மாநாட்டில், 'நாம் தமிழர் கடைசி தடை செய்யப்பட வேண்டிய இயக்கம்' என்று பேசி, அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

seeman

இந்நிலையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண் குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அந்த வழக்கு தொடர்பாக சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்றைய தினம் வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி விஜயா முன்னிலையில் நடந்தது. ஆனால், இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராகவில்லை.

அதனால், வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, 'இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்' என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். மீண்டும் அந்த வழக்கு மதியம் 3 மணிக்கு நடைபெற்றது. அப்பொழுது, திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் சீமான் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள், 'சீமான் ஏற்கனவே வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் இன்று அவரால் வர முடியவில்லை. நாளை அவர் ஆஜராவார். எனவே, வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தனர்.

varun kumar

இந்நிலையில், வருண் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், 'வழக்கின் எதிரியான சீமான் சினிமா பார்க்க செல்கிறார். கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார். வேறு பல நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார். ஆனால், நீதிமன்ற மாண்பு என்னவென்று தெரியாமல் உள்ளார்' என குற்றம்சாட்டி வாதிட்டார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து, 'நாளை கண்டிப்பாக நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.

Disclosure of Assets: `769 நீதிபதிகளில் 95 பேரே...'- சொத்து விவர வெளியீடு விவகாரத்தில் நடப்பதென்ன?

சில வாரங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதும், அதற்குப் பிறகு அவர் அலகாபாத் உயர் நீதிம... மேலும் பார்க்க

அன்னை இல்லம்: `எந்த உரிமையும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்க’ - ராம்குமாருக்கு உத்தரவு

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்ப... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நெருங்கும் இறுதிக்கட்டம்.. 9 பேரிடம் 50 கேள்விகள்; நீதிபதி அதிரடி உத்தரவு

அதிமுக ஆட்சியில் கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே அதிர வைத்தது. அதிமுக புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், தற்போதுவரை இந்த வழக்கு அரசியல் ரீதியாக விவாத பொருளாக... மேலும் பார்க்க

தங்களின் சொத்து விவரங்களை பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்! - முழு விவரம்

நீதிபதிகளின் செயல்பாடுகளின் வெளிப்படை தன்மை குறித்து எப்பொழுதும் கேள்வி எழுப்பப்பட்ட வந்திருக்கிறது. குறிப்பாக அவர்களது சொத்து விவரங்கள் சம்பந்தமாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதும், பிறகு அது குறித்து வ... மேலும் பார்க்க

வீடு ஜப்தி வழக்கு : `சகோதரர் ராம்குமார் கடனுக்கு உதவ முடியாது’ - உயர் நீதிமன்றத்தில் பிரபு தரப்பு

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்... மேலும் பார்க்க

Chennai: `வணிக வளாகம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது' -VR மால் வழக்கில் நுகர்வோர் ஆணையம் உத்தரவு

சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், திருமங்கலத்தில் செயல்படும் வி.ஆர் வணிக வளாகம் இனி பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த நபர் அளித்த புகாரின் அ... மேலும் பார்க்க