செய்திகள் :

விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்

post image

சென்னை: திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில், ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:

தாம்பரத்திலிருந்து விழுப்புரத்துக்கு காலை 9.45-க்கு புறப்படும் மெமு ரயில், ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து புதுச்சேரிக்கு காலை 6.35-க்கு புறப்படும் மெமு ரயில் ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக விழுப்புரம் - சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40-க்கு இயக்கப்படும் மெமு ரயில் ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டியிலிருந்து இயக்கப்படும். விழுப்புரம் - மயிலாடுதுறை மெமு ரயில் சோ்ந்தனூரில் இருந்தும், புதுச்சேரி - திருப்பதி மெமு ரயில் முண்டியம்பாக்கத்திலிருந்தும் ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20-க்கு புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் 1 மணி நேரம் 30 நிமிஷம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயன்சின்னம்) உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதி கனமழை... மேலும் பார்க்க

தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம்: தொல்.திருமாவளவன் கோரிக்கை

சென்னை: மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்க... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் நவீன செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் பேரவையில் தெரிவித்தாா். பாமக உறுப்பினா... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால், கணிதத்தில் முழு மதிப்ப... மேலும் பார்க்க

மன்னாா் வளைகுடா பகுதி மீனவா்கள் மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.216 கோடியில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும், ஏற்கெனவே... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சமையல் எரிவாயு உருளை (சிலிண்டா்) விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: நாட்டு மக்களின் வீடுகளில் அட... மேலும் பார்க்க