செய்திகள் :

Chennai: `வணிக வளாகம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது' -VR மால் வழக்கில் நுகர்வோர் ஆணையம் உத்தரவு

post image

சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், திருமங்கலத்தில் செயல்படும் வி.ஆர் வணிக வளாகம் இனி பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. இது அமலுக்கு வர சில நாள்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

நியாயமற்ற நடைமுறைகளின்படி, கட்டணம் விதித்ததால் புகார் மனு அளித்த நபருக்கு வணிக வளாகம் 12,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Parking

Chennai VR Mall-ல் நடந்தது என்ன?

புகாரின்படி, சென்னையைச் சேர்ந்த வி.அருண் குமார் என்ற நபர் ஏப்ரல் 26, 2023-ல் வி.ஆர்.மாலுக்கு சென்றுள்ளார். அங்கு, அவரது இருசக்கர வாகனத்திற்கு 1மணி நேரம் 57 நிமிடங்கள் பார்க்கிங் கட்டணமாக 80 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் பார்வையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உரிய பார்க்கிங் வசதி செய்து தரவேண்டியது கட்டாயம் என்ற நிலையில், தன்னிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து பார்கிங் உதவியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் அருண் குமார்.

தொடர்ந்து சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சுட்டிக்காட்டி நுகர்வோர் மன்றத்தில் புகார் எழுப்பியுள்ளார் அருண்.

மேலும் அவரது புகாரில், வணிக வளாகத்தில் முதல் 1 மணி நேரத்துக்கு மிகப் பெரிய தொகையாக 50 ரூபாய் வசூலிக்கப்படுவதையும், பார்கிங் உதவியாளர் தன்னிடம் கட்டணம் செலுத்த வற்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி, வணிக வளாகத்திற்குள் உள்ள பார்க்கிங்குக்கு கட்டணம் வசூலிப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும்.

நுகர்வோர் ஆணையம் இதேப்போன்ற, ருச்சி மாலுக்கு எதிரான குஜராத் அரசின் வழக்கு, கொச்சி லூலூ மாலுக்கு எதிரான பாலி வடக்கன் என்பவரது வழக்கு ஆகியவற்றையும் பிற தீர்ப்புகளையும் ஆராய்ந்துள்ளது.

தலைவர் டி. கோபிநாத் தலைமையில், உறுப்பினர்கள் வி.ராமமூர்த்தி மற்றும் கவிதா கண்ணன் ஆகியோர் தலைமையிலான நுகர்வோர் ஆணையம், வணிக வளாகம் பார்க்கிங் கட்டணம் வாங்கும் வழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் அருண் செலுத்திய பார்க்கிங் கட்டணம் உள்பட, மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ.10,000 வழங்கவும், வழக்கு செலவுக்காக ரூ.2000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

மதுரை: இழப்பீடு தராமல் 50 ஆண்டுகள் இழுத்தடிப்பு; கலெக்டரின் காரை ஜப்தி செய்ய வந்தவர்களால் பரபரப்பு

நிலத்தை எடுத்துக்கொண்டதற்கு 50 ஆண்டுகளாக உரிய இழப்பீட்டை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரின் காரை கயிறு கட்டி இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

`மனிதாபிமானமற்ற அணுகுமுறை...' - அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில், "மார்பகத்தைப் பிடிப்பதையோ... அல்லது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பதையோ பாலியல் வன்கொடுமை முயற்சியாக கருத முடியாது. அதனை பாலியல் ... மேலும் பார்க்க

"திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது" - சென்னை உயர் நீதிமன்றம் கூறியதன் பின்னணி என்ன?

தொல்லியல் துறையினர், திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மதுரையைச் சேர்ந்த சோலைக்கண்ணன், வழக்கறிஞர் முத்து... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி: `நீங்கள் சொல்லும் தேதியில் எல்லாம் ஒத்தி வைக்க முடியாது’ - காட்டமான உச்ச நீதிமன்றம்

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமான நபர்களிடம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய... மேலும் பார்க்க

FSO பதவி: `கூடுதல் தகுதியைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்ய முடியாது' - உச்ச நீதிமன்றம் உத்தரவு

`குறிப்பிட்ட பணியில் இணைய, தேவையான தகுதி என பரிந்துரைக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிகம் கற்ற நபரை அவரது கல்வித்தகுதியை மட்டுமே காரணமாக காட்டி பணியில் இணைக்காமல் நிராகரிக்க கூடாது' என்று உச்சநீதிமன்றம... மேலும் பார்க்க

சென்னை வேல் யாத்திரை: `தெளிவான உத்தரவு; தலையிட விரும்பவில்லை’ - மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம்

இந்து கடவுளான முருகனின் கோயில் அமைந்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலையை, அங்குள்ள இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடுவதாகவும், அந்த மலையை காக்கும் வகையில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க கோரி பார... மேலும் பார்க்க