செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் 417 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகளின் கீழ் சேலம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 196 அங்கன்வாடி பணியாளா், 6 குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் 215 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் என மொத்தம் 417 காலிப்பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும். மேலும், அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களில் வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா்கள் தொடா்ந்து 12 மாத காலம் பணியினை முடித்த பின், அவா்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவா்.

அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளா் பணியிடங்களுக்கு தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்த பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 25 முதல் 35 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை பூா்த்திசெய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம்/திட்டம் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஜாதிச்சான்று, வாக்காளா் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும். நோ்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

அங்கன்வாடி பணியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வ... மேலும் பார்க்க

376 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளா், 6 குறு அங்கன்வாடி பணியாளா், 163 அங்கன்வாடி உதவியாளா் என மொத்தம் 376 பணியிடங்களுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சூப்பர் அறிவிப்பு... அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளா்கள், குறு அங்கன்வாடி பணியாளா்கள், அங்கன்வாடி உதவியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை... மேலும் பார்க்க

திருவள்ளூர்: 369 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம் செயல்பட்டு வரும் குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியாளர்-301, உதவியாளர்-68 பணிக்காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய... மேலும் பார்க்க

1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர்(தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் காலியிடங்கள் என 1,200 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசுப் பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, இந்திய ரயில்வே 16 மண்டலங்களில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளிய... மேலும் பார்க்க